சனி, 15 அக்டோபர், 2016

ஒரு புரட்சிகரக் கட்சியின் அமைப்பு சார்ந்த விஷயங்களைப்
பொதுவெளியில் முன்வைத்து விவாதிக்கத் தேவையில்லை;
அதற்கான அனுமதியும் எனக்கு இல்லை. நிற்க.
**
எஸ்.வி.ஆர். அ மார்க்ஸ், ரவிக்குமார் ஆகியோர் அமைப்பை
விட்டு வெளியேறியது அவர்களின் சொந்த முடிவு.
வெளியேறிய பிறகு, மார்க்சியத்திற்கு எதிராக, வரிந்து
கட்டிக் கொண்டு செயல்பட்டது அனைவரும் அறிந்ததே.
1980களில் அவர்கள் எழுதிய எழுத்துக்களைப் படித்த,
அல்லது இப்போது படிக்கிற ஒவ்வொருவருக்கும்,
அவர்களின் மார்க்சிய எதிர்ப்பு நிலை உள்ளங்கை
நெல்லிக்கனியாக விளங்கும்.
**
1) ஸ்டாலின் எதிர்ப்பு 2) அமைப்புக் கட்டுப்பாட்டிற்கு
உட்படாமல், பூர்ஷ்வா கட்சி உறுப்பினர்களைப் போல்
செயல்பட்டது, 3) அணிகளைக் குழப்பியது 4) NGO ஆதரவு
5) NGO அமைப்புகளுடன், கட்சியின் நிலைக்கு எதிராக
தொடர்பில் இருந்தது, 6) பின்நவீனத்துவக் கருத்துக்களை
கட்சியின் அணிகளுக்குள் விதைத்தது, இன்ன பிற.
**
பிரதானமாக, கட்சியும் சமூகமும் கோருகின்ற
அர்ப்பணிப்பு துளியும் இல்லாமல், அறிவுஜீவிகள்
என்ற வகையில் சலுகை கோரியது அவர்களின்
குட்டி முதலாளித்துவ நிலைகளை வெளிப்படுத்தியது.
**
மார்க்சியம் என்பது அடிப்படையிலேயே தப்பு என்று
அவர்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்து போனது.
எனவே அப்படிப் பட்டவர்கள் கட்சியில் எப்படி நீடிக்க
முடியும்?         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக