வெள்ளி, 28 அக்டோபர், 2016

சில ஆண்டுகளுக்கு முன்பு, அநேகமாக 2011-12இல்,
2G ஊழல் குறித்து, பிரதமருக்குத் தந்தி கொடுக்குமாறு
ஜெயலலிதா தமது கட்சியினருக்கு ஆணையிட்டார்.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள
BSNL சேவை மையங்களில் அதிமுகவினர், அமைச்சர்கள்
உட்பட, தந்தி கொடுத்தனர். அப்போது தந்திகளைப்
பெற்றுக் கொண்டு ரசீது கொடுத்த BSNL ஊழியர்களுடன்
அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவை
நாளிதழ்களில் வெளியாயின.
**
நான் பணியாற்றிய அலுவலகத்தில், அப்போதைய
அமைச்சர் ஜெயக்குமார் தந்தி கொடுக்க வந்து,
எங்களின் கவுன்டர் ஊழியருடன் புகைப்படம் எடுத்துக்
கொண்டார். இந்த நிகழ்வில் புகைப்படம் எடுத்துக் கொண்ட
எங்கள் ஊழியர்  ஒரு பெண்மணி.
**
எனவே இல்லாத சட்டத்தை, நடைமுறையை இருப்பதாக
வலிந்து கற்பிதம் செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன்
வேண்டுகிறேன்.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக