வெள்ளி, 28 அக்டோபர், 2016

ஜெயமோகனுக்கு சான்றிதழ் வழங்குகிறோம்!
-------------------------------------------------------------------------------------
தோழர் ஜெயமோகன் 1980களின் இறுதியில், மத்திய
அரசின் தொலைதொடர்புத் துறையில் (Dept of Telecom)
அத்துக் கூலியாக (டெய்லி  வேஜஸ்) வேலைக்குச்
சேர்ந்தார். சில ஆண்டுகளின் பின் பணி நிரந்தரம்
செய்யப்பட்டு, Telecom Operating Assistant (General) ஆக
ரூ 975-1660 சம்பள விகிதத்தில் தருமபுரி SSA வில்
வேலையில் சேர்ந்தார். (SSA = Secondary Switching Area).
**
அன்றைய மத்திய காங்கிரஸ் அரசின் தொலைதொடர்பு
அமைச்சராக இருந்த சி எம் ஸ்டீபன், இத்துறையில்
அத்துக் கூலி முறையைக் கொண்டு வந்தார். அத்துக்
கூலிகளுக்கு RTP (Reserved Trained Pool) என்று பெயர்.
ஒரு நாளில் தொடர்ச்சியாக ஆறு மணி நேரம் வேலை
மட்டுமே இவர்களுக்கு வழங்கப் படும். இது SHORT DUTY
முறை எனப்படும் எட்டு மணி நேரம் வேலை கொடுத்தால்,
நிரந்தரம் செய்ய வேண்டியது வரும். இதைத் தவிர்க்கவே
ஆறு மணி நேர வேலை.
**
தொலைத்தொடர்புத் துறை கணினி மயமாக்கப்
பட்டதைத் தொடர்ந்து, கேடர்கள் சீரமைக்கப்
பட்டன. இதைத் தொடர்ந்து, கணினிப் பயிற்சிக்குப் பின்,
தோழர் ஜெயமோகன் ரூ 1200 சம்பள விகிதத்தில்
அமர்த்தப் பட்டார். பின்னர் ரூ 1400 சம்பள விகிதத்திற்கு
உயர்ந்தார். பின்னர் 01.10.2000இல்  BSNL நிறுவனத்தில்
இணைந்தார். இறுதியில் விருப்ப ஒய்வு பெற்றார்.
**
ஒரு தொழிலாளியாக எப்போதுமே மாடு மாதிரி
உழைத்தவர் ஜெயமோகன். அவரின் உழைப்பில்
எவரும் குறை கண்டதில்லை. அவரைப் பற்றி
இவ்வாறு சான்றிதழ் அளிக்க எங்களின் NFTE BSNL
தொழிற்சங்கத்திற்கு முழு உரிமை உண்டு.                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக