ஞாயிறு, 30 அக்டோபர், 2016

தோழர் ஜெயமோகன்!
-----------------------------------------
தோழர் ஜெயமோகன் மத்திய அரசின் தொலை தொடர்புத்
துறையிலும் பின்னர் BSNL நிறுவனத்திலும் 25 ஆண்டுகள்
பணியாற்றினார். அப்போது அவர் எங்களின் கம்யூனிஸ்ட்
தொழிற்சங்கத்தில்,  NFTE BSNL  உறுப்பினராக இருந்தார்.
சங்க  முன்னோடியாகவும் இருந்தார். சங்கத்தில் பொறுப்பு
வகித்தார். அனைத்து வேலைநிறுத்தங்களிலும்
பங்கேற்றார். வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவு கோரி
எங்களுடன் சேர்ந்து தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டார்.
**
ஒரு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமானது சக தொழிலாளியை
"தோழர்" என்று அழைப்பது உலகம் முழுவதும் உள்ள
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களின் நடைமுறை.
**
தொழிற்சங்கம் என்றால் என்னவென்றே தெரியாத
மூடர்களுக்கு இது வியப்பாக இருக்கலாம். அத்தகைய
இழிவான குட்டி முதலாளித்துவ அற்பப் பதர்களை
நினைத்து நாங்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறோம்.
ROFL! ROFL!
**
ஆனால் எங்கள் போன் மெக்கானிக்குகளும் ரெகுலர்
மஸ்தூர்களும் இன்டர்நெட் ஸ்லாங்குகளைப்
பயன்படுத்துவதில்லை. அவர்கள் கையில் உள்ள
இரும்பு ராடுகளைப் பயன்படுத்துவார்கள்.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக