செவ்வாய், 25 அக்டோபர், 2016

காரணம்-விளைவு, மார்க்சியம், நவீன அறிவியல் பற்றி...
------------------------------------------------------------------------------------------------------
காரணம்-விளைவு என்ற பைனரி நிலை, அதாவது
காரண காரியப் பொருத்தம் (cause and effect relationship)
என்பது மார்க்சியத்தில் ஒரு வகைமை ஆகும்.
இதன் பொருள், எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம்
உண்டு என்பதாகும்.
**
பழுதான எந்திரம் வேலை செய்கிறது; இது விளைவு.
இதற்கான காரணம்: மெக்கானிக் அதைப் பழுது
பார்த்தது. அது போல, நோய் வந்த உடல் நலம்
பெறுகிறது. இது விளைவு. காரணம்: மருத்துவர் அளித்த
சிகிச்சை. இவ்வாறு நிகழ்வுகளைப் பார்க்க
மார்க்சியம் கற்றுத் தருகிறது.
**
அதே போல, ஒரு சமூகம் எப்படி இருக்கிறது என்பதையும்
மார்க்ஸ் ஆராய்ந்தார். சமூகம் அப்படி இருப்பதானது
"விளைவு" என்று எடுத்துக் கொண்டால், அதற்கான
"காரணம்" என்ன என்பதையும் மார்க்ஸ் ஆராய்ந்தார்.
இந்த ஆராய்ச்சியின் இறுதியில், முதலாளித்துவ
சமூகம் எப்படி இயங்குகிறது என்பதற்கான விதிகளைக்
கண்டறிந்தார். மூலதனத்தை எழுதினார். அரசியல், கலை,
இலக்கியம், பண்பாடு ஆகிய அனைத்தும் பொருளியல்
அடித்தளத்தின் பிரதிபலிப்புகளாகவே உள்ளன
என்று கண்டறிந்தார்.
**
காரண-காரியப் பொருத்தம் என்பதை மார்க்ஸ்
பொருள்முதல்வாதத்தில் இருந்து எடுத்துக் கொண்டார்.
பொருள்முதல்வாதம் "காரணம் இல்லாமல் காரியம்
இல்லை" என்கிறது.
**
நவீன அறிவியலில், ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு
வரை காரணம்-விளைவு செல்லுபடி ஆகிறது. அதாவது,
Cause and effect is VALID upto Relativity Theory but thereafter with the advent of
Quantum theory the said cause and effect ceases to exist.
**
குவான்டம்  கோட்பாடு வந்த பின்னால், அதில்
"காரணம்-விளைவு" இல்லை. எனவே, நிகழ்வுகளை
விளக்குவதில் குவான்டம் கொள்கை கணக்கில் எடுத்துக்
கொள்ளப்பட வேண்டும். ஆனால் மார்க்சியமானது
நியூட்டனின் இயற்பியல் வரை மட்டுமே அறிவியலை
உள்வாங்கி உள்ளது. அதற்குப் பின்னான அறிவியலை
உள்வாங்கி, மார்க்சியமும் பொருள்முதல்வாதமும்
தம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக