சனி, 29 அக்டோபர், 2016

மத்திய அரசின் தொலை தொடர்புத்துறையில்
ஒரு அத்துக் கூலியாக (Daily wages) வேலைக்குச்
சேர்ந்தவர் தோழர் ஜெயமோகன். அவர் நாகர்கோவில்
SSAவில் Senior Telecom Operating Assistant (General) ஆகப்
பணியாற்றினார். அவர் டெலிபோன் பில் கவுன்டரில்
வேலை செய்ததை நான் அறிந்தவன்; கண்ணால்
பார்த்தவன். ஒரு டெலிகாம் அசிஸ்டன்ட் என்ற
முறையில், அவர் ஒரு சிறந்த ஊழியராக இருந்தார்
என்பது வரலாறு.
**
தோழர் ஜெயமோகன் நன்றாக வேலை செய்தாரா
இல்லையா என்பதற்கு தெருவில் போகிற குப்பனும்
சுப்பனும் சான்றிதழ் வழங்க முடியாது. நாங்கள்தான்
அதற்கான சான்றிதழ் வழங்கும் அதிகாரமும்
உரிமையும் படைத்தவர்கள். ஜெயமோகனின்
சர்வீஸ் போக்கில், adverse entries ஆக இருந்தவை,
அவர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற நாட்களே
தவிர, வேறு எதுவும் அல்ல.
**
தங்களின் சீழ் பிடித்த குட்டி முதலாளித்துவ மன
வக்கிரங்களைத் தீர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள்
ஜெயமோகனின் வேலைத் திறன் குறித்து
சான்றிதழ் வழங்க முற்படுவது கயமையிலும் கயமை ஆகும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக