வெள்ளி, 28 அக்டோபர், 2016

வீடியோவில் காட்டப்பட்ட பெண்மணி யார் என்று
துப்பறிந்து கண்டுபிடித்து, அதன் பிறகு கருத்துச்
சொல்லும் குட்டி முதலாளித்துவ நடைமுறை
NFTE BSNL தொழிற்சங்கத்தில் இல்லை. நிற்க.
**
இங்கு அந்தப் பெண்மணி ஒரு குறியீடு மட்டுமே.
குறியீடு என்பதன் பொருள் தெரியாமலேயே தொடர்ந்து
உரையாடுவதால் எப்பயனும் இல்லை.
"பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்" என்கிறார் வள்ளுவர்.
**
அந்தப் பெண்மணியைப் போல ஆயிரம்
பெண்மணிகளும் ஆண்களும் களத்தில்,
கவுன்டரில் பணி புரிந்து மக்களுக்குத் தொல்லை
கொடுத்து வருகிறார்கள்.
**
வங்கியின் கவுன்டர் (counter) பணி என்பது செய்கையின்
வேகத்தை (velocity of action) அதிகபட்ச அளவில் கோருவது.
அங்கு ஆமை வேகம் அனுமதிக்க முடியாதது.
கண்டனத்திற்கு உள்ளாகும். இது இயற்கையே.
இதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். இதைப்
புரிந்து கொள்ளாமல், தொடர்ந்து பேசுவதால்
யாருக்கும் பயன் இல்லை.
**
உடம்பு சரியில்லை என்றால் VRSஇல் போக வேண்டும்.
அல்லது, வாடிக்கையாளர்களோடு நேரடித் தொடர்பு
இல்லாத, வேறு ஒரு சீட்டில், உதாரணம்: DESK WORK ,
வேலை செய்ய வேண்டும். SENSITIVE SEATஇல் போய்
உட்கார்ந்து கொண்டு, வாடிக்கையாளர்களின்
தாலியை அறுக்கக் கூடாது. இதெல்லாம் சாதாரணமான
காமன் சென்ஸ். இது கூட இல்லாமல்,
வாடிக்கையாளர்களுக்குத்  தொல்லை கொடுத்தால்
அதைக் கண்டிப்பது இயற்கையே. எனவே இதை
ஜெயமோகன் கண்டித்ததில் எந்தத் தவறும் இல்லை.
**

           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக