ஞாயிறு, 16 அக்டோபர், 2016

ரங்கநாயகம்மா கொலை செய்து விட்டார்!
சுயஇன்பம் அனுபவித்த திருப்தியில் விடலைகள்!
ரங்கநாயகம்மா நூல் திறனாய்வு!
நூல் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதில்!
---------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
------------------------------------------------------------------------------------------
அவர் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கிறார்;
அவர் முகம் தெரியவில்லை; மாறாக ஒரு பொருளாதார
நிபுணரின் முகம் தெரிகிறது. உற்றுப் பார்க்கும்போது
அது ஆடம் ஸ்மித்தின் முகமாக இருக்கிறது. தொடர்ந்து
உற்று உற்றுப்பார்க்கிறார்.

நார்சிஸத்தின் உச்சத்தில் அவர் தன் சொந்த முகத்தை
மறந்து போகிறார். ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ,
ஜான் மேனார்ட் கெயின்ஸ் என்று ஒவ்வொரு முகமாக
எடுத்து அணிந்து கொள்கிறார்.

புதிய முகம் வழங்கிய நெற்றிச் சுருக்கங்கள்
தந்த உவகையுடன் ரங்கநாயகம்மாவின்
"சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு ....." நூலைக்
கையில் எடுக்கிறார். எடுத்த வேகத்தில் சில
பிரகடனங்களை உரக்க முன்மொழிகிறார்.

ரங்கநாயகம்மா மார்க்சியத்தைக் கொலை செய்து
விட்டார் என்று அடித் தொண்டையில் இருந்து
கத்துகிறார். சற்றேறக் குறைய 110 டெசிபெல்லில்
அலறிய அக்குரல் கேட்டு  உறங்கிக் கொண்டிருந்த
குழந்தைகள் துயில் கலைந்து அழுதன.

அவரோ தொடர்ந்து தமது பிரகடனங்களை ஓசையுடன்
முழங்கிக் கொண்டிருந்தார். "உற்பத்தி உறவுகள்" வேறு;
"உழைப்பு சார்ந்த உறவுகள்" வேறு; (Production relations and
Labour relations are different) ரங்கநாயகம்மா இரண்டும்
ஒன்றுதான் என்கிறார்; இது இமாலயத் தவறு என்றார். 

எப்படி அது இமாலயத் தவறாகும் என்றோ, அல்லது
குறைந்தபட்சம் பரங்கிமலைத் தவறாவது ஆகும்
என்றோ, அந்தத் "தவறு" காரணமாக விளைந்த
பாதிப்பு என்ன என்றோ  அவர் கூற முன்வரவில்லை.
கவனத்தை ஈர்ப்பதில் வெற்றி பெற்று விட்டோம்
என்ற எண்ணம் அவருக்கு நிறைவைத் தந்தது.
சுயஇன்பம் அனுபவித்து முடிந்ததும்
விடலைக்கு ஏற்படும்  திருப்தியை அவர் அடைந்தார்.

ரங்கநாயகம்மாவின் நூல் சமூகவியல் மற்றும்
அரசியல் நூல் என்ற வகைமையில் (sociology cum politics)
வரும். அது ஒரு பொருளியல் நூல் அல்ல. பொருளியல்
அறிஞர்களின் கோட்பாடுகள் அனைத்தும் எடுத்துக்
கொள்ளப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு,
கிடைத்த விடைகளை வரிசைப் படுத்திய
பொருளியல் நூல் அல்ல அது.

சில கருத்துக்களை விளக்க, அடிப்படை மார்க்சியத்தை
(basic marxism) அவர் கைக்கொள்கிறார். "உற்பத்தி உறவுகள்",
"உழைப்புசார் உறவுகள்" ஆகிய மார்க்சியத் தொடர்களை
அவர் பயன்படுத்துகிறார். இத்தொடர்கள் ஒரு பொருளியல்
நூலில் ஆளப்படும்போது பேணப்பட வேண்டிய அதே
கறார்த்தன்மை, சமூகவியல் கோணத்தில் (sociological context)  
ஆளப்படும்போது தேவைப்படுவதில்லை.

தேவையான இடங்களில் "உற்பத்தி உறவுகள்" என்று
குறிப்பிடும் நூலாசிரியர், பிற இடங்களில் "உழைப்புசார்
உறவுகள்" என்று குறிப்பிடுகிறார். இதனால் எந்தப்
பொருள் மயக்கமும் வாசகனுக்கு ஏற்படவில்லை.
முதலில் NOUN ஐப் பயன்படுத்தி, அதன் பின் வருகிற இடங்களில் PRONOUNஐப் பயன்படுத்துவது மாதிரியான
இயல்பானதொரு செயலே இது. (கவனிக்கவும்: இங்கு
NOUN, PRONOUN ஆகிய சொற்கள் உவமைகளாக
மட்டுமே கையாளப் படுகின்றன).

ரங்கநாயகம்மா எப்போதுமே காலரிக்கு வாசிக்கிறவர்.
பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை எழுதுகிறவர்
அவர். இதன் பொருள் வாசகத் தன்மையில் முதிர்ச்சி
அடையாத, எளிய, தொடக்கநிலை வாசகர்களுக்காக
எழுதி வருபவர் அவர் என்பதே.

எந்த ஒரு பேச்சாளரும் ஒரு கருத்தரங்கில் பேசுவது
போன்று, தொழிற்சங்க வாயில் கூட்டத்தில் பேச
இயலாது. ஒரே விதமான கறார்த் தன்மையை இரு
இடங்களிலும் பேண முடியாது. எனவேதான்
ரங்கநாயகம்மா வடிவ எளிமை கருதி இரு
தொடர்களையும்  ஒரே பொருளில் தேவைக்கேற்ப
ஆள்கிறார். இதனால்  உள்ளடக்கத்திற்கு எவ்வித
பங்கமும் நேர்ந்து விடவில்லை. அதாவது பொருள்
மாறுபாடு எதுவும் ஏற்பட்டு விடவில்லை.

மொத்தம் 413 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில்,
பொருளியல் சார்ந்த அத்தியாயங்கள் மிகவும்
குறைவு, "அம்பேத்காரைப் பொறுத்தவரை
பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு"
என்ற தலைப்பிலான அத்தியாயம்-14 (பக்-187-204)
பொருளியல் குறித்த தொடக்கநிலைப் புரிதலை
வாசகனுக்கு அளிக்க முயல்கிறது.

"வட்டி" என்பது நியாயமான ஒன்றே என்ற
முதலாளியப் புரிதலை மறுத்து, "வட்டி" என்பது
சுரண்டல் என்ற மார்க்சியப் புரிதல் வாசகனுக்கு
அளிக்கப் படுகிறது. இதுதான் இந்த அத்தியாயத்தின்
சாரம். இதில் "உற்பத்தி உறவுகள்", "உழைப்புசார்
உறவுகள்" ஆகிய தொடர்களை ஒரே பொருளில்
பயன்படுத்தி இருப்பதால் மார்க்சியத்திற்கு எந்த
பங்கமும் நேர்ந்து விடவில்லை. எதையாவது சொல்ல
வேண்டும் என்பதற்காகச் சொல்லப் படுபவையே
இது போன்ற வீணான விமர்சனங்கள்.

அம்பேத்கார் கூறுகிறார்:
"சாதி அமைப்பு தொழில்களை மட்டும்
பிரிக்கவில்லை; தொழிலாளர்களையும்
அது பிரிக்கிறது".
(ரங்கநாயகம்மா நூல்: பக்-166, வலது பாதி)

1) தொழில் பிரிவினை (division of labour)
2) தொழிலாளர் பிரிவினை ( division of labourers)
என்ற இரண்டு பிரிவினைகள் பற்றி அம்பேத்கார்
கூறுகிறார். இதைத்தான் 'உழைப்புப் பிரிவினை',
'உழைப்பாளர் பிரிவினை' என்று ரங்கநாயகம்மா
விளக்குகிறார். ரங்கநாயகம்மா இரண்டு பிரிவாகப்
பிரிக்கிறார் என்று குற்றம் சுமத்துவோர்,
உண்மையில் அம்பேத்கார் மீதுதான் குற்றம்
சுமத்துகின்றனர். ஏனெனில் இரண்டு பிரிவாகப்
பிரித்தவர் அம்பேத்கார்தான்.  

இந்த நூலில் நுட்பமான சிக்கல் மிகுந்த பொருளியல்
கோட்பாடுகள், ஒரு பொருளியல் அர்த்தத்தில்
(context) பேசப்படவில்லை. அதற்கான தேவையே
இந்த நூலுக்கு இல்லை. மார்க்சியப் பொருளியல்
அடிப்படைகளை (basics) தொடக்கநிலை
வாசகனுக்குப் புரிய வைப்பதில் நூலாசிரியர்
வெற்றி அடைந்து இருக்கிறார். சில தொடர்களைப்
பயன்படுத்தியதில் அவர் எத்தகைய தவறையும்
செய்து விடவில்லை. இதை இங்கு நிரூபித்து
இருக்கிறோம். Much ado about nothing!
**************************************************************   


           
 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக