சனி, 29 அக்டோபர், 2016

குட்டி முதலாளித்துவ ஆண்குறிகளின் நீளமும்
தோழர் ஜெயமோகன் மீதான வன்மமும்!
-------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலர், சென்னை,
NFTE BSNL (BSNL தொழிற்சங்கம்)
-------------------------------------------------------------------------------------
கட்டக் கடைசியில் தோழர் ஜெயமோகன் மன்னிப்புக்
கேட்டு விட்டார். குட்டி முதலாளித்துவ அற்பர்களின்
உலகில் ஒரே குதூஹலம்! வில்லை ஓடித்தவன்
ராமன்தான் என்று தெரிந்ததுமே, சீதையின் அல்குல்
வளர்ந்து விட்டது என்று வர்ணிப்பார் கம்பர்.

"ஆம் அவனே கொல் என்று ஐயம் நீங்கினாள்
வாம மேகலை இற வளர்ந்தது அல்குலே."

அதைப்போல, ஜெயமோகன் மன்னிப்புக் கேட்ட
அடுத்த நொடியிலேயே,  சில குட்டி முதலாளித்துவப்
பேராசிரியர்களின் ஆண்குறி சில மைக்ரோ மீட்டர்கள்
நீளம் வளர்ந்து விட்டதாம். இந்தத் தீபாவளியில் எனக்கு
இரட்டிப்பு மகிழ்ச்சி என்று கூத்தாடுகிறாராம்
புதுடில்லிவாழ் பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன்.
(dl = increase in length = say 5 micrometer).

இங்கு சென்னையிலோ, கிறித்துவ விசுவாசியான
பேராசிரியர் அ மார்க்ஸ், மனசைக் கல்லாக்கிக் கொண்டு, இந்துவாக மதம் மாறி, (மானசீகமாகத்தான்)
ஒரு சிறுவனின் தீபாவளி உற்சாகத்தோடு, சரவெடி
வெடித்துக் கொண்டிருக்கிறார். (dl = say 4 micrometer)

மேலும், எழுத்தாளரென உரிமை கோரும் யமுனா
ராஜேந்திரன், ஓரினச் சேர்க்கை ஆதரவாளரான
சவுண்டி ஞானி சங்கரன், சீழ் பிடித்த தமுஎகச
வகையறாக்களில் சிலர், எந்த அமைப்பிலும்
சேராத, ஒருநாளும் சேரப்போவதில்லை என்ற
முடிவுடன் இருக்கும் சிறிய புகழுடைய சில பல
குட்டி முதலாளித்துவர்கள்  என்று அனைத்து ரக
குட்டி முதலாளித்துவ அற்பர்களும், ஜெயமோகன்
எதிர்ப்பு ஐக்கிய முன்னணி கட்டி, ஜெயமோகனின்
மன்னிப்பால் வண்ண மயமான இந்தத் தீபாவளியை
புது மாப்பிள்ளைகளின் தலை தீபாவளி உற்சாகத்துடன்
கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
("சிறிய புகழுடைய" என்ற தொடர் மனுஷ்ய புத்திரனின்
ஒரு கவிதையில் இருந்து எடுக்கப் பட்டது, நன்றி.)

ஊழியர் நுகர்வோர் முரண்பாடு!
-----------------------------------------------------------
தோழர் ஜெயமோகன் தொடர்பிலான இந்த நிகழ்வில்,
ஒட்டு மொத்த விவகாரமும் ஊழியர்-நுகர்வோர்
முரண்பாடு பற்றியதே. இந்த முரண்பாடு இன்று
விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இந்த முரண்பாட்டை
எப்படிக் கையாள்வது என்பதே நாம் தீர்வு கண்டாக
வேண்டிய பிரச்சினை.

ஒரு சாதாரண நுகர்வோராக (consumer) வங்கி சேவையில்
உள்ள குறைபாட்டால் தனக்கு ஏற்பட்ட மனக் குமுறலை
வெளிப்படுத்தி இருந்தார் ஜெயமோகன். ஒரு
நுகர்வோராக அவருக்கு உள்ள சட்ட பூர்வமான
அடிப்படை உரிமை அது. இதில் என்ன தவறு?

ஜெயமோகன் சொன்னாரா அல்லது ஜெயலலிதா
சொன்னாரா என்பது இங்கு பிரச்சினையே அல்ல.
சொல்லப்பட்ட விஷயம் என்ன என்பதுதான் பிரச்சினை.
நாடு முழுவதும்  உள்ள அரசுத்துறை, பொதுத்துறை
நிறுவனங்களில் நிலவும் வேலைக் கலாச்சாரம்
வாடிக்கையாளரிடம் பரிவு காட்டுவதாக இல்லை
(not customer-friendly) என்பதுதான் இங்கு பிரச்சினை.

ஜெயமோகனுக்கு நிகழ்ந்த அந்த அனுபவம்
அபூர்வமானதல்ல. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
அலுவலகத்திலும், பரிதாபத்துக்கு உரிய
வாடிக்கையாளர்கள் நாளும் சந்தித்து வரும்
சோகம்தான் அது. பூனைக்கு யார் மணி கட்டுவது
என்ற நிலையில், ஜெயமோகன் மணி கட்டி விட்டார்.

அவ்வளவுதான். 24 மணி நேரமும் அரசு ஊழியர்களைக்
கரித்துக் கொட்டிக் கொண்டு இருக்கும் அத்தனை
குட்டி முதலாளித்துவக் காடையர்களும் ஒரே இரவில்
அரசு ஊழியர் ஆதரவுப்  போராளிகளாக அவதாரம்
எடுத்து, தோழர் ஜெயமோகன் மீது பாய்ந்து பிராண்டி
தங்களின் சிரங்கு அரிப்பைத் தீர்த்தனர்.

இவ்வாறு அரிப்புத் தீர்த்தவர்கள் மேற்குறித்த வங்கி
ஊழியரால் பாதிக்கப் படாதவர்கள். ஜெயமோகனோ
பாதிக்கப் பட்டவர். பாதிப்புக்கு உள்ளான கோபத்தில்,
அந்த ஊழியரை அவர் திட்டுவது இயற்கையே. இது
புரிந்து கொள்ளத் தக்கதே. ஜெயமோகனை வசை
பாடுபவர்கள், இதே போன்ற பாதிப்புக்கு தாங்கள்
இலக்கானால், எப்படி நடந்து கொள்வார்கள்?

பகவத் கீதையில் கூறப்படுகிற "ஸ்திதப் பிரக்ஞன்"
போல நடந்து கொள்வார்களா? நிச்சயமாக இல்லை.
அவர்களும் ஜெயமோகன் போல்தான் நடந்து
கொள்வார்கள். எனவே பாதிக்கப் பட்டவனின்
பார்வையில் இருந்துதான் விஷயத்தைப் பார்க்க
வேண்டுமே தவிர, எவ்வித பாதிப்புக்கும் இலக்கு
ஆகாத வழிப்போக்கனின் பார்வையில் இருந்தல்ல.

நுகர்வோர் சதைப் பிண்டங்கள் அல்ல!
--------------------------------------------------------------------------
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இந்தியாவில்
1986இல்தான் இயற்றப்பட்டது (Consumer Protection Act 1986).
இச்சட்டத்தின்படி, மூன்று அடுக்குகளைக் கொண்ட
மாவட்ட, மாநில, தேசிய அளவிலான நுகர்வோர்
பாதுகாப்பு கவுன்சில்கள் அமைக்கப் பட்டன.

அதற்கு முன்பு, நுகர்வோர் என்பவர்கள் எந்த
உரிமையும் அற்ற சதைப் பிண்டங்களாகவே
நடத்தப்பட்டு வந்தார்கள். இன்று இந்த
30 ஆண்டுகளில் நுகர்வோர் விழிப்புணர்வு பெரிதும்
வளர்ந்துள்ளது. ஊழியர்கள் இதை உணராமல்
பணியாற்றுவது நியாயம் ஆகுமா?

கவுன்டருக்கு உள்ளே இருப்பதால் ஒரு ஊழியர்
கடவுளாகி விட மாட்டார். கவுன்டருக்கு வெளியே
கால் கடுக்க நிற்பவர்கள் மனிதக் குரங்குகள்
ஆகி விட மாட்டார்கள்.

மெதுவாக வேலை செய்பவர்கள், உடல் நலிவுற்றவர்கள்
அதற்கேற்ற சீட்டைத்  தெரிவு செய்ய வேண்டும்.
கவுன்டர் பணி என்பது செயல்பாட்டின் அதிகபட்ச
வேகத்தைக் கோருவது. ஒரு ஊழியர் தனக்கு
உடம்பு சுகமில்லை என்பதற்காக,
வாடிக்கையாளர்களைக் காக்க வைப்பதோ
கஷ்டப் படுத்துவதோ நியாயமல்ல.  

"நுகர்வோரே எஜமானர்கள்" என்பதுதான் எந்த ஒரு
நிறுவனமும் பகிரங்கமாக அறிவித்துள்ள நிலைபாடு.
ஒவ்வொரு BSNL கவுன்டரிலும், மகாத்மா காந்தியின்
"The customer is an important visitor in our premises" என்று தொடங்கும்
வாசகங்கள் அடங்கிய பலகை சுவரில் மாட்டப்பட்டு
இருக்கும். ஊழியர்கள் அதன்படி நடக்க வேண்டும்
அல்லவா? நடக்கிறார்களா?

ஜெயமோகனின் ஆசனத் துவாரத்தில் சில நாவுகள்!
----------------------------------------------------------------------------------------------
ஜெயமோகன் தொடர்புடைய இந்த நிகழ்வில்
விஸ்வரூபம் எடுத்து நிற்பது நுகர்வோர் உரிமை
என்ற விஷயம்தான். ஆனால் மெத்தப் படித்த
மேதாவிகளாகத் தங்களைக் கருதிக் கொண்டு
சுயஇன்பம் அடையும் 1) ராஜன் குறை 2) அ மார்க்ஸ்
3) யமுனா ராஜேந்திரன் 4) சவுண்டி ஞானி
வகையறாக்களின் மண்டையில் மட்டும் இந்த
விஷயம் ஏறவே மாட்டேன் என்கிறது.

அதற்குக் காரணம் அவர்கள் எப்போதுமே
ஜெயமோகனின் ஆசனத் துவாரத்தில் தங்கள்
நாவுகளை வைத்துக் கொண்டு ஏதாவது கழிவு
கிடைக்குமா என்று காத்துக் கிடப்பதுதான். பாவம்,
ஜெயமோகனுக்கு மலச்சிக்கல் உள்ள நாட்களில்
இவர்களின் பாடு திண்டாட்டம்தான்.

ஆண்குறி சிறிது வளர்ந்து விட்டதால் புளகாங்கிதம்
அடைந்த பேராசிரியர் ராஜன் குறை திடீரென
மார்க்சிய அவதாரம் எடுத்து விட்டார். தீபாவளி
கொண்டாடப் போகிறேன் என்று பகிரங்கமாக
அறிவித்து தீபாவளி கொண்டாடும் "மார்க்சிஸ்ட்"(!)
அநேகமாக இவராகத் தான் இருக்கும்!

"இதை எல்லாமா விவஸ்தை இல்லாமல் வெளியில்
சொல்லுவார்" என்று அலுத்துக் கொள்கின்றனர்
ஆண்டுதோறும்த ரகசியமாக தீபாவளி கொண்டாடும்
தமுஎகச புரட்சிகள்.

மார்க்சிய மேதாவியின் கேள்வி!
-----------------------------------------------------------
மெதுவாக வேலை செய்வதற்கும் சோஷலிசத்திற்கும்
என்ன சம்பந்தம் என்று அப்பாவித் தனமாகக்
கேள்வி எழுப்புகிறார் பேராசிரியர் ராஜன் குறை.

உழைப்பு, உழைப்புச் சக்தி, வேலைநேரம் ஆகியவற்றை
எல்லாம் கறாராகவும் துல்லியமாகவும் ஆராய்ந்து,
'உபரி மதிப்பு'  என்னும் கோட்பாட்டை வகுத்தார் காரல்
மார்க்ஸ். அவர் உழைப்புச் சக்தி என்று கணக்கில்
கொண்டது சராசரியான உழைப்புச் சக்தியே தவிர,
சராசரிக்கும் வெகு கீழான உழைப்புச் சக்தியை அல்ல.

உதாரணமாக, ஒரு மணி நேரத்தில், சில பெட்டிகளுக்கு
ஆணி அடிக்க வேண்டும் என்றால், சிலரால் 150
பெட்டிகளுக்கு ஆணி அடிக்க முடியும்; மந்தமாக
வேலை செய்யும் சிலரால் 50 பெட்டிகளுக்கு மட்டுமே
ஆணி அடிக்க முடியும். இங்கு சராசரியான 100
பெட்டிகளுக்கு ஆணி அடிப்பதையே காரல் மார்க்ஸ்
எடுத்துக் கொண்டார்.

சோவியத் சோஷலிச வேலைக் கலாச்சாரம்!
---------------------------------------------------------------------------------
சோவியத் ஒன்றியத்தில் புரட்சியின் வெற்றிக்குப்
பின்னர், ஆலைகளில் எத்தகைய வேலைக்
கலாச்சாரத்தை லெனின் செயல்படுத்தினார் என்பதை
மார்க்சிஸ்டுகள் அறிவார்கள். சுபோத்னிக்குகள்
பற்றியும் மார்க்சிஸ்டுகள் அறிவார்கள். ஆனால்
குட்டி முதலாளித்துவச் சுய இன்பவாதியான
ராஜன் குறை இதை அறிய மாட்டார்.

"காரல் மார்க்ஸ் கண்டு பிடித்த உபரி மதிப்பு
என்பது என் யோனி மயிருக்குச் சமம்" என்று
கவிதை எழுதிய மேட்டுக்குடிப் பெண்ணிய
விகாரம் லீனா மணிமேகலை என்ற அசிங்கத்தின்
கூட்டாளி இவர். கவிதை என்ற பெயரில் மார்க்ஸை
அவமதித்த லீனாவுக்குக் கண்டனங்கள் பெருகின.
அப்போது லீனாவை ஆதரித்துக் கூட்டம்
நடத்தியவர்கள் ராஜன் குறையும் அ மார்க்சும்.
இதுதான் இவர்களின் மார்க்சிய அருகதை!

சுலபமான இலக்குகள் மட்டும்!
--------------------------------------------------------
குட்டி முதலாளித்துவக் கோழைகள் எப்போதுமே
சுலபமான இலக்குகளை (soft targets) மட்டுமே
வரித்துக் கொள்வார்கள். 1) மகாத்மா காந்தி
2) கலைஞர் கருணாநிதி 3) ஜெயமோகன்
ஆகியோர் இக்கோழைகளின் தாக்குதலுக்கு
அடிக்கடி இலக்காவார்கள். இதே ஜெயமோகன்
ஒரு நாடார் ஆகவோ முக்குலத்தோர் ஆகவோ
இருந்திருந்தால், இந்த கு.மு கோழைகள் எப்படி
எல்லாம் பதுங்குவார்கள் என்பது அனைவரும்
அறிந்ததே.

கலைஞர் உயிருடன் இருக்கும்போதே அவர் சாக
வேண்டும் என்று முகநூலில் கலைஞரின்
சுவரிலேயே சென்று பதிவு போடுகிறான் கு.மு
கோழை. இதே போல் ஒரே ஒரு பதிவை, வேறு
எந்தத் தலைவரின் முகநூல் சுவரிலாவது போட
முடியுமா?   

எழுத்தாளர் பி ஏ கிருஷ்ணன் அறிவுறுத்தியதன்
பேரில் ஜெயமோகன் தம் பதிவை நீக்கி விட்டார்
என்பது செய்தி. ஜெயமோகனும் சரி, பிஏகேவும்
சரி, புத்திசாலிகள். கு.மு கோழைகள் அனைவரும்
ஒன்று திரண்டு, தங்கள் கழிவுகளைக் கையில்
எடுத்துக் கொண்டு, வீச வரும்போது, அந்த முழு
மூடர்களுடன் சரிக்குச் சரி மல்லுக்கு நிற்பது
விவேகம் அல்ல என்று இருவருமே உணர்ந்து
இருந்தனர்.

ஜெயமோகன் எழுதிய இப்பதிவை, பி ஏ கிருஷ்ணன்
எழுதி இருந்தால், எந்த நாயாவது குரைத்து
இருக்குமா? ஏனெனில், மெல்லிய குரைப்பு முயற்சிக்கே
பி.ஏ.கிருஷ்ணன் வழக்குப் போட்டு சிறைக்குள்
தள்ளி விடுவார் என்பது கு.மு கோழைகளுக்குத்
தெரியும்.

இறுதியாக, ஊழியர்-நுகர்வோர் முரண்பாட்டைத்
தீர்க்க வல்ல ஒரே வழி, ஊழியர்கள் நுகர்வோரை
அனுசரித்துப் போவதுதான். எங்களின் தொழிற்சங்க
அனுபவங்கள், நாங்கள் எதிர்கொண்ட ஊழியர் மீதான
துறை விசாரணைகள், வழக்குகள் அவற்றில்
வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் ஆகியவை  இதைத்தான்
சுட்டிக் காட்டுகின்றன.
-----------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு-1: இந்தப் பதிவில் vulgarity இருக்கிறது என்று
வாசகர்கள் கருதினால், அதற்கு அவர்கள் லீனா
மணிமேகலைக்கே நன்றி சொல்ல வேண்டும்.

பின்குறிப்பு-2: இந்தப் பதிவு ஜெயமோகனை
ஆதரிப்பதற்காக  எழுதப் பட்டதல்ல. அப்படிக்
கருதுவோர் தக்க மனநல மருத்துவரை நாடலாம்.
ஜெயமோகன் எழுப்பியுள்ள ஊழியர்-நுகர்வோர்
முரண்பாடு பற்றியும், அதை எப்படிக் கையாள்வது
என்பது பற்றியுமே இப்பதிவு.

பின்குறிப்பு-3: ஓரளவு குறிப்பிடத்தக்க IQ உள்ள
வாசகர்களை மனதில் கொண்டு இக்கட்டுரை எழுதப்
பட்டுள்ளது. பிறழ் புரிதலைத் தவிர்க்க, IQ குறைந்த
ஏனையோர் இக்கட்டுரையைப் படிப்பதைத் தவிர்த்து
விடுவது நல்லது.
**************************************************************





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக