சனி, 29 அக்டோபர், 2016

தீபாவளி நாளில் அலுவலகப் பணி!
-----------------------------------------------------------------
என்னுடைய நீண்ட அலுவலகப் பணியில்
28 ஆண்டுகள் தொடர்ச்சியாக தீபாவளியன்று
டியூட்டி பார்த்து இருக்கிறேன். ஒவ்வொரு
தீபாவளியிலும் டபிள் டியூட்டி. ஆக, 28 x 2=56 டியூட்டிகள்
பார்த்து இருக்கிறேன்.

02-08 டியூட்டியும் 07-15 டியூட்டியும் சேர்த்துப் பார்ப்பது,
அல்லது 07-15 and 14-21 சேர்த்துப் பார்ப்பது என்று
தீபாவளியன்று முழுவதும் அலுவலகத்தில்
டியூட்டியில் இருந்திருக்கிறேன். வாழ்க்கையின்
மிகவும் மகிழ்ச்சி நிரம்பிய தருணங்கள் அவை.

25 தீபாவளிகளை அலுவலகப் பணியில் நான்
நிறைவு செய்த பிறகு, அப்போது நான் பணியாற்றிய
SFMSS Control Roomஇல் நண்பர்களும் சக ஊழியர்களும்
எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். தோழர் எஸ் வெங்கடராமன் விழாவை முன்னின்று நடத்தினார்.
அப்போதைய எங்கள் GM திரு K G சசிதரன் அவர்கள்
என்னைப் பாராட்டிப் பேசினார்.

எத்தனையோ பாராட்டு விழாக்களைச் சந்தித்தவன்
நான்.  அவற்றில் பல இன்று எனக்கு மறந்தே போய்
விட்டன. அனால், இந்தப் பாராட்டு விழா எனக்கு
இன்றும் பசுமையாக நினைவு இருக்கிறது.

தற்போது பணி ஓய்வுக்குப்பின் டியூட்டி பார்க்க
வழியில்லை. இது மிகுந்த சோகத்தைத் தருகிறது.
சற்று நெகிழ்ந்தால் அழுகை வந்து விடும்
போலிருக்கிறது.

டியூட்டி பார்ப்பதுதான் நிறைவைத் தருகிறது.
ஓய்வு வருத்தத்தைத் தான் தருகிறது.
***************************************************************
மீள்பதிவு 2016 அக்டோபர்
======================================================  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக