வியாழன், 13 அக்டோபர், 2016

தோழர் மதிவாணன் அவர்களுக்கு,
-----------------------------------------------------------------
ரங்கநாயகம்மா அவர்களின் நூல் குறித்து,
மார்க்சிய லெனினிய வெளிச்சத்தில் திறனாய்வு
செய்து, எங்கள் மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
இதுவரை 13 கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
அவை யாவும் முகநூலில் காணக் கிடைக்கின்றன
(எனது டைம்லைனில் உள்ளன). அவற்றைத் தாங்கள்
படித்து, தங்கள் கருத்தை உரைக்கலாம்.
**
மார்க்ஸாலஜிஸ்ட் (Marxologist) திரு எஸ்.வி.ஆர் அவர்கள்
மிகப்பெரிய எதிர்ப்புரட்சிகர சக்தி என்பதை
ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தி, ஒரு கட்டுரை
வெளியிட்டுள்ளோம். எங்களின் கட்டுரை குறித்து
தங்களின் கருத்தை வெளியிடலாமே.
**
அடுத்து, தனிநபர்களுக்கு இடையிலான பூசல்கள்,
பிணக்குகள், அவற்றின் விளைவாக எழும் வார்த்தை
அஸ்திரங்கள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல்
கடந்து செல்கிறது மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.
தாங்கள் எனக்கு ஜூனியர் என்பதால், அந்த உரிமையுடன்
சொல்கிறேன்.
**
எங்கள் கருத்துக்களைப் புறக்கணிப்பின் மூலம்
கடந்து செல்ல முடியாது. அவற்றுக்குப் பதில் கூறாமல்
விடும்போது, அவை நிலைபேறு உடையதாய்
ஆகிவிடுகின்றன.
**
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக