வெள்ளி, 28 அக்டோபர், 2016

குட்டி முதலாளித்துவத்தின் பாஷை வேறு!
பாட்டாளி வர்க்கத்தின் பாஷை வேறு!!
------------------------------------------------------------------------------
குட்டி முதலாளித்துவ மேனாமினுக்கிகள் தொழிலாளி
வர்க்கத்தின் பாஷையைப் புரிந்து கொள்வதில்லை.
அவர்கள் எப்போதுமே தொழிலாளர்கள் பேசுவதை,
இளக்காரமாகப் பார்க்கிறவர்கள். தொழிலாளர்களின்
பாஷையில் இடக்கர் அடக்கல் கிடையாது. unparliamentary
words என்று இந்த மேட்டுக்குடிச் சீமான்கள் அருவருக்கும்
சொற்களை எங்கள் போன் மெக்கானிக்குகளும் ரெகுலர்
மஸ்தூர்களும் இயல்பாகப் பேசுவார்கள், நான் உட்பட.
**
தோழர் ஜெயமோகன் டெலிகாம் அசிஸ்டன்ட்டாகப்
பணியாற்றியவர். அவர் ஒன்றும் unparliamentary ஆகப்
பேசிவிடவில்லை. இதுவே எங்கள் போன் மெக்கானிக்காக
இருந்தால், அவர் இந்தச் சூழ்நிலையில் பயன்படுத்தும்
வார்த்தையே வேறுதான்.
**
எனவே தோழர் ஜெயமோகன் தனிமனிதத் தாக்குதலில்
ஈடுபடுகிறார் என்றோ தரக் குறைவாக எழுதி இருக்கிறார்
என்றோ கூறுவதைப் பாட்டாளி வர்க்கத்தின் பார்வையில்
ஏற்க இயலாது. தோழர் ஜெயமோகனின் கண்டனம்
எவருக்கேனும் தரக் குறைவாகத் தெரிகிறது என்றால்,
சந்தேகமே இல்லை, அவர் ஒரு குட்டி முதலாளித்துவ
அற்பர்தான்!
**
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
NFTE BSNL தொழிற்சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர்
சென்னை.

டி.வி.எஸ் சோமு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக