ஞாயிறு, 30 அக்டோபர், 2016

கேவலத்தின் உச்சம் தொட்ட கவிதை!
---------------------------------------------------------------------
எமது கட்டுரையில் குறிப்பிட்ட
லீனா மணிமேகலையின் கவிதை
கீழே தரப்பட்டுள்ளது. (பின்னூட்டம் காண்க)
வாசகர்களின் பார்வைக்காக!
இந்தக் கேவலமான கவிதையை எழுதியதால்
லீனா மணிமேகலைக்கு கண்டனங்கள் பெருகின.
அப்போது லீனாவை ஆதரித்துக் கூட்டம்
போட்டவர்கள் பேராசிரியர் ராஜன் குறை என்பவரும்
பேராசிரியர் அ மார்க்சும்.
இப்படிப்பட்ட அ மார்க்ஸையும் ராஜன் குறை என்பவரையும்
கண்டித்து எழுதினால், அவர்களுக்கு வால் பிடிப்பவர்களை
என்ன செய்வது?


-----------------------------------------------------------------------------------

நான் நுகர்வோர்-ஊழியர் முரண்பாடு குறித்த பல
வழக்குகளை துறைசார் விசாரணைகளில் நடத்தி
வருபவன். அதாவது domestic inquiryகளில். அந்த வகையில்
ஜெயமோகனின் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக
இருக்கிறது. எனவே அது குறித்து, எங்கள் ஊழியர்களுக்கு
customer friendlyஆக நடக்க வேண்டியதன் அவசியத்தை
உணர்த்தும் பொருட்டு இந்த விவகாரத்தைப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.
**
ஜெயமோகன் சிறந்த ஊழியராகவும் சிறந்த
தொழிற்சங்க முன்னோடியாகவும் இருந்தார் என்பதை
எவருமே மறுக்க முடியாது.
**
அவரின் தற்போதைய நிலைபாடுகள், தற்போதைய
அரசியல் குறித்து என் கட்டுரை அக்கறை கொள்ளவில்லை.
என் கட்டுரை அவரைப் பற்றிய மதிப்பீடு அல்ல;
மாறாக, அவர் முன்வைத்த நுகர்வோர்-ஊழியர் முரண்பாடு
குறித்த, இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
ஒரு பிரச்சினை குறித்த கட்டுரை. அவ்வளவே.  



முதலிலேயே எச்சரிக்கையாக ஊழியர்கள் நடந்து
கொள்வார்கள் என்றால், வழக்கில் இருந்து தப்பலாம்.
நாங்கள் கரடியாய்க் கத்தினாலும் சரி, ஊழியர்கள்
காதில் வாங்குவதே இல்லை. ஜெயமோகன் போன்ற
பிரபலங்கள் இப்போது விவகாரத்தை சந்திக்கு
இழுத்து விட்டார்கள். அவர் முன்வைத்த பிரச்சினை
குறித்து விவாதம் நடந்து இருக்க வேண்டும். ஆனால்
துரதிருஷ்ட வசமாக,  விஷயம் மாறிப்போய், ஜெயமோகன்
மீதான கண்டனமாக முடிந்து விட்டது. அதனால்

நஷ்டம் ஊழியர்களுக்குத்தான். ஏனெனில், ஊழியர்கள்
தங்களைத் தற்காத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு
ஜெயமோகன் கட்டுரை மூலம் கிடைத்தது. ஆனால்
அது கருச் சிதைவு ஆகி விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக