வியாழன், 19 மார்ச், 2015

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலைப் 
புறக்கணித்த போலிக் கம்யூனிஸ்ட்கள்!
--------------------------------------------------------------------------------
மாக்சிம் கார்க்கி தமது தாய் நாவலை 1906-1907
ஆண்டுகளில் எழுதினர். (முதல் பாகம்:1906,
இரண்டாம் பாகம்:1907). இந்த உலகப் புகழ் பெற்ற நாவலை,
தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்ட்கள் (CPI, CPM ) எப்போது தமிழில் 
மொழிபெயர்த்துத் தந்தார்கள் தெரியுமா?
1975இல். (repeat in the year 1975). அதாவது 70 ஆண்டுகள் கழித்து.
(பார்க்க: தொ.மு.சி. ரகுநாதன் மொழிபெயர்ப்பு, முன்னேற்றப் 
பதிப்பகம், மாஸ்கோ 1975 வெளியீடு).
தாய் நாவல் ரஷ்ய மொழி தவிர, பிற உலக மொழிகள் 
127 மொழிகளில் வெளிவந்துள்ளது. பல பதிப்புகளைக் 
கண்டுள்ளது.
--
ஆனாலும், தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்ட்கள் 1975இல்தான் 
இதைத் தமிழில் மொழிபெயர்த்து, தமிழ் இலக்கிய 
ஆர்வலர்களுக்கு வழங்கினர். இதனால்தான்  நாம் கூறுகிறோம் 
தாய் நாவலை தமிழகக் கம்யூனிஸ்ட்கள் புறக்கணித்தார்கள் என்று.
நாம் கூறுவது சரியே என்று நிரூபித்துள்ளோம்.     
-----------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக