வியாழன், 12 மார்ச், 2015

ஆர்.எஸ்.எஸ் ஒரு ஆயிரங்கால் பூச்சி!
ஆர்.எஸ்.எஸ் காடையர்கள் எதற்கும் துணிந்தவர்கள்!
போலி முற்போக்கு, போலிப் புரட்சிகளால் 
ஆர்.எஸ்.எஸ் வன்முறையை எதிர்கொள்ள முடியாது!
----------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
--------------------------------------------------------------------------------------------- 
ஆர்.எஸ்.எஸ் ஒரு ஆக்டோபஸ்(octopus). எனினும் octo 
என்பதற்கு எட்டு என்று பொருள் கொள்ள வேண்டாம்.
ஏனெனில், ஆர்.எஸ்.எஸ் ஒரு ஆயிரங்கால் பூச்சி.
ஆயிரங்கால்களும் நச்சுக் கால்கள்!
--------------------------------------------------------------------------------------
பாஜகவின் கூட்டணிக் கட்சியான IJK கட்சி நிறுவனர் 
பாரிவேந்தர் என்ற பச்சமுத்துவின் பு.த.டி.வி. அலுவலக 
வளாகத்தின் மண் தரையில், இன்று அதிகாலை(12.03.2015)
சிவகாசிப் பட்டாசுகளின் தரத்திலான, வீரியம் குறைந்த,
(very mild explosive) டிபன் பாக்ஸ் குண்டுகளை வீசி எறிந்து
விட்டுச் சென்றுள்ளனர் ஆர்.எஸ்.எஸ் சார்புக் காடையர்கள்.
--------------------------------------------------------------------------------------------------
பொருட்சேதம், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ஏற்படுத்துவதும் காடையர்களின் நோக்கம் அல்ல. 
இந்நிகழ்வு மூலம் ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்துவதே 
நோக்கம். மொத்தத் தமிழ்ச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து,
தங்கள் நிலையைப் பிரகடனம் செய்து இருக்கிறார்கள் 
காடையர்கள். தங்கள் வழியில் குறுக்கிட்டால் பின்விளைவுகள் 
அஞ்சத்தக்கதாக இருக்கும் என்பதே அவர்கள் கூற வருவது.
----------------------------------------------------------------------------------------------------
வெடிகுண்டை நாங்கள்தான் வீசினோம் என்று ஒப்புக் கொண்டு 
மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார் "இந்து இளைஞர்
சேனா" அமைப்பின் மாநிலத் தலைவர் ஜெயம் பாண்டியன்.
 சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------
ஆர்.எஸ்.எஸ்.சின் தயார் நிலையை (preparedness) இந்நிகழ்வு 
துல்லியமாகச் சொல்கிறது. வெடிகுண்டை வீசிவிட்டு, அதற்குப் 
பொறுப்பும் ஏற்றுக் கொண்டு, சிறையில் மகிழ்ச்சியோடு கம்பி 
எண்ணிக் கொண்டு இருக்கும் இவர்களை எதிர்ப்பது சுலபமல்ல.
போலிக் கம்யூனிஸ்ட்கள், சுயநலமிகள், முகத்தை  மறைத்து  
முக்காடு போட்டுக் கொண்டு, FAKE Idகளில் பதுங்கிக் கொண்டு 
வீராவேசம் பேசும் குட்டி முதலாளித்துவக் கோழைகள்,  இன்ன பிறர்    
ஆகியோரால் ஆர்.எஸ்.எஸ்.சின் நிழலைக்கூட நெருங்க முடியாது.
------------------------------------------------------------------------------------------------------------------ 
பதினேழாயிரம் பேர் திருமணமே செய்து கொள்ளாமல் 
ஆர்.எஸ்.எஸ்.சில் முழுநேர ஊழியர்களாகப் பணியாற்று
கின்றனர் என்கிறார் தோழர் தொல் திருமாவளவன்.
இவர்கள் போக, மோசமான கிரிமினல்களைத் தேர்ந்தெடுத்து,
அவர்களை இந்து அமைப்புக்குள் கொண்டு வந்து, பதவிகள் 
கொடுத்து,எதிரிகள்மீது பாயத் தயார் நிலையில் வைத்துள்ளது 
ஆர்.எஸ்.எஸ்.
---------------------------------------------------------------------------------------------------------
இது ஆர்.எஸ்.எஸ் நிலை. எதிர் முகாமில்  
எதற்கும் துணிந்த தயார் நிலையில் உள்ளவர்கள்
எத்தனை பேர்  இருக்கிறார்கள்? 
இதுவே இன்று நம் முன் உள்ள கேள்வி.
இதற்கு இல்லை என்பதே பதில்.
-------------------------------------------------------------------------------------------------------       
 நக்சல்பாரிகளும் மாவோயிஸ்ட்களும் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்.ஐக் 
களத்தில் சந்திக்கும் துணிவு உள்ளவர்கள். மற்றவர்கள் 
வெண்ணெய் வெட்டிகள்!
*********************************************************************************      
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக