ஞாயிறு, 15 மார்ச், 2015

மோடியின் இலங்கைப் பேருரை போற்றுதலுக்குரியது!
எல்லோர் கண்ணையும் திறந்து விட்டது!
Modi's speech in Lankan parliament is an EYE OPENER!
----------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------------------------
History repeats itself because men repeats their mistakes.
--------------------Oscar Wilde.............................
இலங்கை  நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் 
மோடி உரையாற்றினார். அப்போது விடுதலைப் 
புலிகளின் பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முறியடித்த 
சிங்கள இனவெறி அரசுக்குத் தம் பாராட்டைத் தெரிவித்தார்.
-----------------------------------------------------------------------------------------------------
இந்த உரையின் வாசகங்கள் மனப்பாடம் செய்யத் தகுந்தவை.
பேழையுள் வைத்துப் பாடம் செய்யத் தக்க இவ்வுரை, எட்டுக் 
கோடித் தமிழர்களின் கண்ணைத் திறந்த உரை ஆகும்.
------------------------------------------------------------------------------------------
காங்கிரஸ் வடதுருவம் என்றால் பாஜக தென் துருவம். காங்கிரஸ் 
ஈழத் தமிழர்களை அழிக்கப் பார்க்கிறது. பாஜகவோ ஆதரிக்கிறது.
2009 தேர்தலில் பாஜகவை ஆதரிப்போம்; ஜெயலலிதாவை 
ஆதரிப்போம். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றெல்லாம் 
தமிழ் மக்களை ஏமாற்றினார்களே தமிழ் தேசியப் போலிகள்!
---------------------------------------------------------------------------------------------------
இன்று எல்லார் முகத்திலும் கரியைப் பூசி விட்டாரே மோடி!
விடுதலைப் புலிகள் அழிந்து போனார்கள் என்று சொல்லும்போது 
மோடியின் முகத்திலும் சிங்கள இனவெறியர்கள் முகத்திலும் 
எத்தனை பூரிப்பு! எவ்வளவு புளகாங்கிதம்!!
இது பற்றாது என்று கருதி, சிங்களப் பாசிச இனப் படுகொலைக் 
குற்றவாளி ராஜபக்சேவின் வீட்டுக்கே சென்று, அவனைப் 
பாராட்டி விட்டு வந்தாரே மோடி!
----------------------------------------------------------------------------------------------
மோடியின் மீது குற்றம் இல்லை. அவர் தம் நிலைபாட்டில் 
உறுதியாக இருக்கிறார். அவர் தமிழரின் எதிரி. அவரைப் 
பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
------------------------------------------------------------------------------------------------
துரோகிகளான தமிழ் தேசியப் போலிகள் இதற்கு என்ன பதில் 
சொல்லப் போகிறார்கள்?
1) நெடுமாறன் 2) வைகோ 3) சீமான் 4) மணியரசன் 5) போலிப் 
பெரியாரிஸ்ட்டுகள் 6) தரகன் தமிழருவி இன்ன பிற துரோகிகள் 
இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
புருஷனோடு சண்டையிட்டுப் பிரபலமான பெண் கவிஞர் 
தாமரையும் இந்தத் துரோகக் கூட்டத்தில் ஒருத்திதான்!
-------------------------------------------------------------------------------------------
கவ்விய எலும்புக்குக் குரைக்கும் நாய்களைப் போல, இந்தப் 
போலிகள், தங்கள் பார்ப்பன விசுவாசத்தைக் காட்டினார்களே,
இப்போது இத் துரோகிகள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
2009 தேர்தலின்போது, சீமான் பேசிய கூட்டங்களுக்கு நிதி உதவி 
செய்தது அதிமுகதான் என்று உண்மையைப் போட்டு 
உடைத்தாரே, அப்ரூவர் அய்யநாதன்! இவர்கள் வாங்கிய எச்சில் காசு எவ்வளவு என்று கேட்க வேண்டும் ஒவ்வொரு தமிழனும்.
------------------------------------------------------------------------------------------------
பதில் சொல்லுங்கள் துரோகிகளே, என்று மானமுள்ள 
ஒவ்வொரு தமிழனும் இந்தத் துரோகிகளின் முகத்தில் காரி 
உமிழ்ந்து கேட்க வேண்டும்!
----------------------------------------------------------------------------------------------------   
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக