வியாழன், 12 மார்ச், 2015

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதைக் 
கண்டிக்க மறுக்கும் போலிப் புரட்சிகள்!
------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------------------
புதிய தலைமுறை டி.வி அலுவலக வளாகத்தினுள் 
இன்று அதிகாலை (12.03.2015) டிபன் பாக்ஸ் குண்டுகள் 
வீசப் பட்டுள்ளன.
தொடர்ந்து நிகழ்ந்து வரும் இத்தாக்குதல்கள் 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது 
என்பதற்கான தெளிவான அடையாளம் ஆகும்.
----------------------------------------------------------------------------------
பு.த. டி.வி மீதான இத்தாக்குதல் குறித்து, கொதித்துப்போய் 
வீராவேசப் பேட்டி கொடுக்கும் "புரட்சியாளர்கள்", மறந்தும்கூட 
தமிழகத்தில் சட்டம்  ஒழுங்கு சீர்குலைந்து வருவது 
குறித்து, கண்டனம் வேண்டாம், கவலைகூடத் 
தெரிவிக்கத் தயாராக இல்லை.
----------------------------------------------------------------------------------
போலிக் கம்யூனிஸ்ட் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் பொங்கி வழியும் 
புரட்சிகர ஆவேசத்தை!!!), மகிழ்ச்சியுடன் ஒளிபரப்பி 
வருகிறது பச்சமுத்துவின் டி.வி.
-------------------------------------------------------------------------------------------------
நாம் ஒரே ஒரு கேள்வி மட்டுமே கேட்க விரும்புகிறோம்.
வணக்கத்துக்குரிய கருத்துரிமைப் போராளிகளே,
மொத்த அமைச்சர்களுமே, கார் டயரைக் கும்பிட்டுக் 
கொண்டும், மண்சோறு தின்று கொண்டும் இருந்தால்,
சட்டம் ஒழுங்கு பரணுக்குத்தானே போகும்!
ஆனாலும், தமிழக அரசைக் கண்டிக்காமல், ஜெயலலிதா 
மனம் கோணாமல் புர்ரச்சீ நடத்துகிறீர்களே, இது 
நியாயமா? மக்களை ஏன் இப்படி ஏமாற்றுகிறீர்கள்?
----------------------------------------------------------------------------------------------- 
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக