புதன், 11 மார்ச், 2015

ஜெயலலிதா ஒரு அனிச்சப்பூ!
மார்க்சிஸ்ட் ஜி. ராமகிருஷ்ணன் கணிப்பு!
---------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
------------------------------------------------------------------------
விளைநிலமா தரிசு நிலமா என்றெல்லாம் பாகுபடுத்தாமல் 
முப்போகம் விளையும் நிலத்தைக் கூட, மிகப்பெரும்
கார்ப்பொரேட் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
இதற்கான மசோதா அதிமுகவின் ஆதரவுடன் 
 மக்களவையில் நிறைவேறி உள்ளது.
---------------------------------------------------------------------------------
"கண்ணிரண்டும் ஒன்றே காண் "  என்கிறார் துறைமங்கலம் 
சிவப்பிரகாச சுவாமிகள். அவர் கூறியது போன்று,
ஒரு முகத்தின் இரண்டு கண்களாக, பாஜகவும் 
அதிமுகவும் மக்களவையில் செயல்பட்டு வருகின்றன.
---------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டின் நாற்பது எம்.பி.க்களும் நிலப்பறிப்பு 
மசோதாவுக்கு ஆதரவளித்தனர் என்பது எட்டுக்கோடித் 
தமிழ் மக்களுக்கும் இழைத்த பெருந்துரோகம்.
---------------------------------------------------------------------------------
ஆனாலும், நமது போலிக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் 
அதிமுகவின் இத்துரோகத்தைக் கண்டிக்க முன்வரவில்லை.
அதிகம் போனால், 'மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூச் 
செண்டாலே"என்பது போல, அதிமுகவை மென்மையாகக் 
கடிந்து, லேசாக ஒரு சின்ன அறிக்கை வெளியிட்டு விட்டு,
தங்கள் கட்சியின் முட்டாள் அணிகளை ஏமாற்றுவார்கள்
ஜி ராமகிருஷ்ணன் போன்ற போலிக் கம்யூனிஸ்ட்கள்.
--------------------------------------------------------------------------------------------
அனிச்சப் பூவைக் கையாளும் மென்மையுடன், 
ஜெயலலிதாவைக் கையாளும் இந்தப் போலிகளே 
யாரினும் கூடுதலான, துரோகிகள்!
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு 
நல்ல படாஅ பறை.
(குறள்: 1115)
----------------------------------------------------------------------------------------------------        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக