ஞாயிறு, 8 மார்ச், 2015

கோழி மிதித்துக் குஞ்சுக்குச் சேதமா?
ஆர்.எஸ்.எஸ் தாக்குதலால், புதிய தலைமுறைக்குப் பாதிப்பா?
--------------------------------------------------------------------------------------------------- 
புதிய தலைமுறை அலுவலக வாயில் அருகே நின்று இருந்த
ஒளிப்பதிவாளர் மற்றும் செய்தியாளர் மீது ஆர்.எஸ்.எஸ் 
மற்றும் சங்கப் பரிவாரங்கள் ஒரு மென்மையான 
தாக்குதலை இன்று (08.03.2015) நடத்தி உள்ளன.
----------------------------------------------------------------------------------------
தாக்குதல் நடத்தியவர்கள் சமூக விரோதிகள் என்றுதான் 
பு.த. செய்தி கூறுகிறது. நன்கு கவனிக்கவும், சமூக 
விரோதிகள்தானே தவிர, சங்கப் பரிவாரங்கள் அல்ல.
-------------------------------------------------------------------------------------
புதிய தலைமுறை டி.வி பாரிவேந்தர் என்னும் பச்சமுத்து 
அவர்களுக்குச் சொந்தமானது. இவர் IJK என்னும் கட்சியின் 
தலைவர். இது பாஜகவின் நிரந்தரக் கூட்டணிக் கட்சி.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து இதுவரை, IJK தலைவர் 
பச்சமுத்து எவ்விதக் கருத்தையும் கூறவில்லை.
--------------------------------------------------------------------------------------
தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ்.ஐ அடையாளம் காட்டக் 
கூடத் தயாராக இல்லாத பு.த. டி.வி.யை, மக்கள் 
ஆதரிக்கத் தேவையில்லை.
----------------------------------------------------------------------------------------------
கோழி மிதித்துக் குஞ்சுக்குச் சேதம் இல்லை.
நீர் அடித்து நீர் விலகுவதில்லை.    
அதுபோல், ஆர்.எஸ்.எஸ். தாக்குதலால், பு.த.வுக்குப்
பாதிப்பு இல்லை.
------------------------------------------------------------------------------------------
எனவே, இதில் மக்களுக்கு வேலையே இல்லை.
குட்டி முதலாளித்துவக் கழுதைகள்??!!. அவர்கள் 
வழக்கம் போல், முற்போக்கு மலம் கழிக்கட்டும்!
***************************************************************
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக