வெள்ளி, 23 டிசம்பர், 2016

ஐநா சபைத் தலைவர் ஆவாரா சேகர் ரெட்டி?
உலக மருத்துவக் கவுன்சிலின் தலைவராக
கேத்தன் தேசாய் தேர்வானது போல!
--------------------------------------------------------------------------------
1) இந்திய மருத்துவக் கவுன்சிலின் (MCI) தலைவராக
இருந்தவர் கேத்தன் தேசாய். மன்மோகன் சிங்
ஆட்சியின்போது, குலாம் நபி ஆசாத் மத்திய
சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது
மருத்துவக் கவுன்சில் தலைவராக தேசாய்
இருந்தார்.

2) கேத்தன் தேசாய் வீட்டில் ரெயிடு நடந்தது ஏப்ரல்
2010இல். அதாவது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு.
ரெயிடு நடத்தியது சி.பி.ஐ. நன்கு கவனிக்கவும்:
ரெயிடு நடந்த போதும் மன்மோகன் சிங் ஆட்சிதான்.

3) இந்த ரெய்டின் முடிவு என்ன? தோல்வி! படுதோல்வி!!
2012 ஜூலை மாதத்தில் சி.பி.ஐ தன்னுடைய
தோல்வியை அறிவித்தது. இப்போதும் (2012 ஜூலை)
மன்மோகன் சிங்கின் ஆட்சிதான்.

4) சி.பி.ஐ கூறியது என்ன? கேத்தன் தேசாய்க்கு எதிராக
வழக்குத் தொடுக்க எங்களிடம் போதுமான ஆதாரம்
இல்லை. எனவே அவர் மீதான நடவடிக்கைகளைக்
கைவிடுகிறோம் என்று சி.பி.ஐ அறிவித்தது.
இப்போதும் மன்மோகனின் காங்கிரஸ் ஆட்சிதான்.

5) யாரைக் குற்றம் சொல்வது? காங்கிரஸ் ஆட்சியையா?
சி.பி.ஐ. அமைப்பையா? அல்லது உள்ளபடியே
தேசாய் நிரபராதியா?

5) தற்போது உலக மருத்துவக் கவுன்சில், கேத்தன்
தேசாயை அதன் தலைவராகத் தேர்ந்து எடுத்து
இருக்கிறது.

6) தேசாயைப் போல, ஐநா சபையின் தலைவராக
வருங்காலத்தில் சேகர் ரெட்டி தேர்ந்து எடுக்கப்
படவும் வாய்ப்பு உள்ளது.சேகர் ரெட்டி தற்குறி
என்பதால், ராம்மோகன் ராவ் தேர்ந்தெடுக்கப் படலாம்.
*****************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக