வெள்ளி, 30 டிசம்பர், 2016

தமிழகத்துக்கு ஆலகால விஷத்தைத்
தந்தது யார்?
திராவிட இயக்கமே பொறுப்பு!
----------------------------------------------------------
1) தமிழ்ச் சமூகத்தைத் தலைநிமிர வைத்ததில்
திராவிட இயக்கத்திற்கு மகத்தான பங்கும்,
வேறெந்த இயக்ககத்தையும் விட பன்மடங்கு
கூடுதலான பங்கும் உண்டு. இது எவராலும்
மறுக்க முடியாத உண்மை.

2) இங்கு திராவிட இயக்கம் என்பது தந்தை பெரியார்
1925இல் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் முதலாக,
இன்று சசிகலாவின் தலைமையை ஏற்றிருக்கும்
அதிமுக வரையிலான அனைத்து அமைப்புகளையும்
அவற்றின் செயல்பாடுகளையும் குறிக்கும்.

3) ராமச்சந்திர மேனன், வி என் ஜானகி, ஜெயலலிதா,
ஓ பன்னீர் செல்வம் ஆகிய முதல்வர்களும், மேனன்,
ஜெயலலிதா, சசிகலா என்று தொடரும் அதிமுகவின்
பொதுச்செயலாளர்களும் திராவிட இயக்கத்தின்
இருண்ட அத்தியாயங்கள்.

4) அதிமுக என்ற கட்சியை அடிமைகளின் கூடாரமாக
மாற்றியவர் ஜெயலலிதா. பெரியாரின் சுயமரியாதைக்கு
நேர் எதிரான செய்கை இது.

5) ஊரை அடித்து உலையில் போடுதல், அடுத்தவன்
சொத்தை  எழுதி வாங்குதல், கனிம வளங்களைக்
கொள்ளை அடித்தல், இயற்கையையும் சூழலையும்
நாசம் செய்தல், மிகுந்த திமிருடனும் அலட்சியத்துடனும்
ஊழல் செய்தல் ஆகியவற்றை ஒரு கலையாகப்
பயின்று செயல்படுத்தியவர் சசிகலா.

6) இத்தகைய சசிகலா இன்று மிகச் சுலபமாக
அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்று
இருக்கிறார் என்றால், இதற்கு யார் பொறுப்பு?

7) ஒரு கோடிக்கும் மேல் தொண்டர்களைக் கொண்ட,
இன்னும் நாலரை ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆளப்
போகிற அதிமுகவின் தலைமைப் பொறுப்பு என்பது
தமிழகத்தின் தலைமைப் பொறுப்பே ஆகும்.

8) ஆக, தமிழகத்தின் தலைமைப் பொறுப்பை
சசிகலா ஏற்றுள்ளார் என்றால் அதற்குப் பொறுப்பு
திராவிட இயக்கமே. திராவிட இயக்கத்தின் தர்க்க
ரீதியான திரண்டுநிற்றலே (logical culmination)
சசிகலா தலைமைப் பொறுப்புக்கு வந்து இருப்பதாகும்.

9) பாற்கடலைக் கடைந்தபோது அமுதமும் விஷமும்
வந்தது போல, தமிழ்ச் சமூகத்தை திராவிட இயக்கம்
கடைந்தபோது, பல்வேறு நன்மைகள் கிட்டின.
கூடவே மேனன், ஜானகி. ஜெயலலிதா, சசிகலா
என்று நச்சுப் பொருட்களும் கிடைத்துள்ளன.

10) சசிகலா என்ற ஆலகால விஷம் இன்று தமிழகத்தின்
தலைமைக்கு வந்திருப்பதற்கு திராவிட இயக்கமே
பொறுப்பு. இதை எவராலும் மறுக்க முடியாது. இதன்
காரணமாக திராவிட இயக்கம் இன்று குற்றவாளிக்
கூண்டில் நிற்கிறது.
-------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: திராவிட இயக்கத்தில் இருந்து அந்நியப்பட்டு
நிற்கும் எவருக்கும் மேற்கூறிய விமர்சனத்தை
முன்வைக்க அருகதை கிடையாது. ஆனால் திராவிட
இயக்கத்துடன் அரை நூற்றாண்டு காலமாக
தம்மை ஒன்றித்துக் கொண்ட (part and parcel of the Dravidian
movement) எந்த ஒரு செயல்பாட்டாளருக்கும் இந்த
விமர்சனத்தை முன்வைக்க அருகதை உண்டு.
*********************************************************************   
 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக