சனி, 24 டிசம்பர், 2016

நானா நீயா
2 hrs
ஈவெராமசாமி சொன்னது -வைதிகக் கலியாணத்தில் வயதுக்கிரமங்களை தக்க பருவங்களை முக்கியமாய் கவனிப்பதில்லை. தக்க பருவம் வருவதற்கு முன்பு பெண்களுக்குக் கலியாணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்து வருகின்றது. உதாரணமாக 10 வயது வந்தால் ஒரு பறையனுக்கு பிடித்துக்கொடு என்று சொல்லும் பழமொழியைப் பார்த்தால் விளங்கும். 50, 60 வயதான ஆண் கிழத்துக்கு 10, 12 வயது பெண் குழந்தையைப் பிடித்து தாலிகட்டி விடுகிறார்கள். கலியாண விஷயத்தில் ஆண்களுக்கு கிழம் என்பதே இல்லையாம். இந்த விஷயத்திலும் சுயமரியாதைக் கலியாணம் தக்க சரிசமமான வயதுப் பொருத்தம் பார்த்தே செய்யப்படும். - குடியரசு, 07.10.1934. /////
சுயமரியாதைக் கலியாணம் தக்க சரிசமமான வயதுப் பொருத்தம் பார்த்தே செய்யப்படும் என்று பகுத்தறிவுடன் பேசிய ஈவெராமசாமி, ”என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே – பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா – காரணம் ஆயிரம் காட்டட்டுமே,
காட்டினாலும் எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்றும் பேசிய ஈவெரமசாமி, தன் அறிவுரை ஊருக்கு தானே ஒழிய தனக்கில்லை என்பது போல -14 வருடங்கள் கழித்து, தன் தேவைக்காக -தான் சொன்னதையே காற்றில் பறக்கவிட்டு - 45 வயது வித்தியாசத்தில் மணியம்மையை மணந்து, கலியாண விஷயத்தில் ஈவெராமசாமிக்கும் கிழம் என்பதே இல்லையாம் என்று நிருபித்தார்.
ஈவெராமசாமி - ஒரு காரியம் செய்வதற்கு முன், அது குறித்து நேற்று என்ன பேசினோம், நேற்று பேசியதிலிருந்து இன்று முரண்படுகிறோமா - ஒரு வேளை அப்படி முரண்பட நேர்ந்தால், முரண்படுவதற்கு நியாயமான காரணங்களை தாம் கொண்டிருக்க வேண்டும் என்றெல்லாம் ஈவெரா யோசித்தவரில்லை. முரண்படுவதற்கு அநியாயமான காரணங்கள் இருந்தாலும், அதை நியாயப்படுத்துவதற்கு தங்கள் பகுத்தறிவை பயன்படுத்தி கொண்டார்களே தவிர முரண்படுவதற்கு வெட்கமோ, அவமானமோ கிஞ்சித்தும் அடையவில்லை
இந்த பதிவை கமெண்ட்டாக சுனா.பானா. வீரபாண்டியின் பதிவில் போட்டேன். அழித்துவிட்டார்.
Like
Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக