செவ்வாய், 6 டிசம்பர், 2016

நக்சல்பாரி இயக்கத்தின் மூத்த தலைவர்
தோழர் பி வி சீனிவாசன் மறைவுக்கு அஞ்சலி!
===================================================
தமிழக நக்சல்பாரி இயக்கத்தின்  ஸ்தாபகத்
தலைவர்களுள் ஒருவரான மூத்த தோழர்
பி வி சீனிவாசன் அவர்கள் மறைந்தார் என்ற
துயரச் செய்தியால் நெஞ்சு கனக்கிறது. தோழர்
பி வி சீனிவாசன் அவர்கள் CPI ML (Liberation) கட்சியின்
மூத்த தலைவர்களுள் ஒருவர். தோழருக்கு
செவ்வஞ்சலி செலுத்துகிறோம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்வு. அப்போது
மண்டல் பரிந்துரைகள் வெளியாகி இருந்த நேரம்.
தமிழ்நாட்டில் அப்பொருளில் ஆழமான விவாதங்கள்
நடந்து கொண்டிருந்த நேரம்.

வி.எம் கட்சியினர் மண்டல் பரிந்துரைகள் குறித்து
ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
சென்னை சேத்துப்பட்டில் ஒரு பள்ளியில் நடைபெற்ற
அக்கூட்டத்தில் தோழர் பி..வி. சீனிவாசன் முதன்மைப்
பேச்சாளர். பல்வேறு கருத்தோட்டங்கள் உடையோரும்
அக்கூட்டத்தில் பேசுவதற்கு வி.எம் கட்சியினர்
ஏற்பாடு செய்து இருந்தனர்.

அக்கூட்டத்தில் நானும் பங்கேற்று, எங்கள் மா-லெ
அமைப்பின் நிலைபாட்டை விளக்கிப் பேசினேன்.
அக்கூட்டத்தில் நான் எவ்வாறு பங்கேற்க நேர்ந்தது
என்பது குறித்து இப்போது நினைவில்லை.

கூட்டம் முடிவுற்றதும் தோழர் பி.வி.சீனிவாசன் அவர்கள்
நான் முன்வைத்த எங்கள் அமைப்பின் நிலைப்பாடுகளின்
மீது சில கேள்விகளை எழுப்பினார். அது தொடர்பாக சிறிது
நேரம் விவாதித்தோம். எங்கள் தலைவர் குறித்து நலம்
விசாரித்தார்.

இன்று தோழரின் மறைவின்போது, அவருடன்
கலந்துரையாடிய இந்நிகழ்வு நெஞ்சில் நெருடுகிறது.
அதன் பின்னர் தோழருடன் எனக்குத் தொடர்பு இல்லை.

நக்சல்பாரி இயக்கத்தின் மூத்த தலைவர்கள்
ஒவ்வொருவராக நம்மை விட்டுப் பிரிந்து சென்று
கொண்டு இருக்கிறார்கள். தோழர் பி வி சீனிவாசன்
அவர்களுக்கு செவ்வஞ்சலி செலுத்துகிறேன்.
ரெட் சல்யூட், லால் ஸலாம், இன்குலாப் ஜிந்தாபாத்!
******************************************************************  


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக