வெள்ளி, 23 டிசம்பர், 2016

மிகப்பெரிய தீயசக்தியும்
சிறு சிறு தீய சக்திகளும்!
----------------------------------------------
தமிழகத்தின் மிகப்பெரிய தீயசக்தியாக ஜெயலலிதா
விளங்கினார். ஓரிரு தேர்தல்களில் அவர் தோல்வியுற்று
ஆட்சியை இழந்தபோதிலும், தொடர்ந்து
தீய சக்தியாகவே விளங்கி வந்தார்.

அவர் மறைந்த பின்னர், அவரை விஞ்சிய தீயசக்தியாக
சசிகலா திகழ்ந்து வருகிறார்.

ஜெயாவும் சசியும் பல்வேறு  சிறு சிறு தீய சக்திகளை
உருவாக்கி வளர்த்து அதிகாரம் மிக்கவர்களாக
உருவாக்கி, சமூகத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.

புராண காலத்தில் நரகாசுரன் மட்டும்தான் ஒரே ஒரு
தீயசக்தியாக இருந்தான். இன்றோ ஜெயாவும் சசியும்
கணக்கற்ற தீயசக்திகளை உருவாக்கி ஒவ்வொரு
ஊரிலும் உலவ விட்டுள்ளனர்.

மணல் கொள்ளையன் வைகுண்டராஜன், கிரானைட்
கயவன் பி ஆர் பழனிச்சாமி ஆகியோரை சிறு சிறு
தீயசக்திகளாகக் கொள்ளலாம். ஜேப்பியார், பங்காரு
அடிகளார், பச்சமுத்து உள்ளிட்ட எல்லாக் கல்வித்
தந்தைகளுமே தீயசக்திகளுக்கு உதாரணம்தான்.


இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் தீயசக்திகள்
உண்டு என்ற போதிலும், தமிழகத்தின் தீயசக்தியான
ஜெயாவுக்கு அவர்கள் உறை போடக் காண
மாட்டார்கள்.

இந்தியாவின் சட்டமும் நீதி பரிபாலனமும் இத்தகைய
தீயசக்திகளின் மயிரைக் கூடப் பிடுங்க முடியாதவை.
மேலும் உலகிலேயே இந்தியாதான் குற்றவாளிகளின்
சொர்க்கம் ஆகும். இங்கு குற்றம் புரிந்தவனுக்கு
வக்காலத்து வாங்கவும் அவனைப் புனிதன் ஆக்கவும்
சாமானியன் முதல் சக்தி வாய்ந்த ஊடகம் வரை
ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.

சோற்றுக்கு வழியில்லாதவனும், மாதச் சம்பளம்
ரூ 15,000/- மட்டுமே வாங்கும் குட்டி முதலாளித்துவ
அற்பனும், ஒரே இரவில் மாநில சுயாட்சிப்
போராளிகளாக மாறி, ராம மோகன்ராவுக்கு காவடி
தூக்கிக் கொண்டிருக்கும் அசிங்கம் இந்தியாவில்
மட்டும்தான் உண்டு.

என்னதான் ரெயிடு நடத்தி, கோடி கோடியாக
பணத்தைப் பிடித்தாலும், வருமானவரித் துறை,
அமலாக்கப் பிரிவு ஆகியவற்றால் தீயசக்திகளுக்கு
தண்டனை வாங்கி கொடுக்க இயலாது. ஏனெனில்
நமது நீதித்துறை அப்பழுக்கற்ற புனிதர்களை
நீதியரசர்களாகக் கொண்டது. குமாரசாமிகளும்,
தத்துகளும், கங்குலிகளும் நீதியின் மாண்பை
நிலைநிறுத்தாமல் தூங்கச்  செல்ல மாட்டார்கள்.

சேகர் ரெட்டி, ராம மோகன்ராவ் மீதான ரெயிடுகளை
இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.
அவர்கள் பிடிபட்டு இருப்பதும். ரெட்டியின்
கூட்டாளிகள் கம்பி எண்ணுவதும் ஒவ்வொரு
தமிழனாலும் இந்தியக் குடிமகனாலும் வரவேற்கப்
பட வேண்டியவை.

இதற்கு மாறாக, ரெயிடுகளைக் குறை சொல்வதோ,
மாநில சுயாட்சி என்று போதையில் உளறுவதோ
கிரிமினல் குற்றங்கள் ஆகும். நேரடியாகவோ
மறைமுகமாகவோ பூடகமாகவோ இந்தத்
தீய சக்திகளை ஆதரிப்பது கயமையிலும்
கயமை ஆகும்.
***************************************************************



   

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக