சனி, 31 டிசம்பர், 2016

ஜோதிமணி அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
-------------------------------------------------------------------------------------
மனித நாகரிகமே வெட்கித்  தலைகுனியும்
அளவுக்கு காங்கிரஸ் பெண் தலைவர் ஜோதிமணி
அவர்கள் மீதான ஆபாசத் தாக்குதல் தண்டனைக்கு
உரியது. சகோதரி ஜோதிமணி அவர்கள் இணையதளக்
குற்றங்களுக்குக்கான காவல்துறையின் சிறப்புப்
பிரிவில் (சைபர் கிரைம்) புகார் கொடுக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு இதற்கான
செயல்களை முன்னெடுக்க வேண்டும்.

சின்மயி விவகாரத்தில் ஆபாசக் கயவர்கள் கைது
செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப் பட்டது போல,
இக்கயவர்களும் தண்டிக்கப் பட வேண்டும்.

செய்யத் தக்க செயல்களை ஜோதிமணி அவர்கள்
செய்ய வேண்டும். அவருக்கு ஆதரவாக உரத்து
முழங்குவோர் புகார் கொடுக்குமாறு அவரை
வற்புறுத்த வேண்டும்.

இல்லையேல், அரசியல் ரீதியாக குற்றவாளிக்
கயவர்களை எதிர் வன்முறையால் (counter physical violence)
தண்டிக்க வேண்டும். காங்கிரசில் இதற்கு வாய்ப்பு
இல்லாமல் இருந்தால், சட்ட வழி மட்டுமே தீர்வு.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். 
***************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக