செவ்வாய், 27 டிசம்பர், 2016

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மீது ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கும் அதிகாரம், அவரை விட ஒரு சில படிகள்
உயர்ந்த ஒரு கேடரில் உள்ள, அதிகாரம் படைத்த,
COMPETENT AUTHORITYயாக உள்ள மேலதிகாரியால்
மட்டுமே இயலும். நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்
படைத்த அதிகாரி யார் (Disciplinary Authority) என்பதை
வரையறுத்து ஒவ்வொரு துறையிலும் ஒரு பட்டியல்
(panel) இருக்கும். அதன் பிரகாரம் இன்கிரிமென்ட் வெட்டு
முதல் சஸ்பென்ஷன், வேலைநீக்கம் உள்ளிட்ட
தண்டனைகள் வழங்கப் படும். அகில இந்திய கேடரில்
உள்ள அதிகாரிகளை மத்திய அரசுதான் வேலைநீக்கம்
செய்ய இயலும்.
**
அரசு நிர்வாகத்தை, ஆட்சியை உண்மையில்
நடத்துபவர்கள் அதிகாரிகளே. இவர்களை நாம்
அதிகார வர்க்கம் (bureaucracy) என்கிறோம். நல்ல
அறிவுத்திறன் வாய்ந்த ஆளுமை மிக்க
அமைச்சர்களிடம் அதிகாரிகள் அடங்கிப்
போவார்கள். உதாரணம்: ப சிதம்பரம்.
தற்குறி அமைச்சர்கள் அதிகாரிகளிடம் அடங்கிப்
போவார்கள். உதாரணம்: * * ****
**
யதார்த்தத்தில், அதிகாரி--அமைச்சர் உறவு
கணவன்--மனைவி உறவு போன்றது. இருவரும்
சேர்ந்துதான் நிர்வாகத்தை, ஆட்சியை நடத்த
வேண்டும். தொடர்புடைய நபர்களைப் பொறுத்து,
யார் ஆதிக்கம் செலுத்துவது என்பது முடிவு
செய்யப்படும்.
           
அப்படி அல்ல. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட
ஒட்டு மொத்த அதிகார வர்க்கமும், நிலவுகிற
சமூக அமைப்பைப் பராமரிப்பது, பாதுகாப்பது
ஆகிய கடமைகளைக் கொண்டது. அதற்காகவே
பயிற்றுவிக்கப் பட்டது. எனவே சமூக மாற்றம்
என்பதற்கும், நிலவுகிற சமூக அமைப்பை
பாதுகாக்கும் அரசு எந்திரத்தின் உறுப்புக்களான
அதிகார வர்க்கத்திற்கும் சம்பந்தமே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக