வியாழன், 15 டிசம்பர், 2016

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில்
சசிகலாவின் திருவுருவப் படம் திறப்பு!
மார்க்ஸ் லெனின் படங்கள் அகற்றப்  படுகின்றன!
தா பாண்டியன், நல்லகண்ணு அறிவிப்பு!
----------------------------------------------------------------------------------------------
1) கம்யூனிசத்தை வளர்ப்பதில் எப்போதுமே
தா பாண்டியன், நல்லகண்ணு இருவருக்கும்
இடையில் ஒரு ஆரோக்கியமான போட்டி உண்டு.

2) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில
அலுவலகத்தில் (பாலன் இல்லம், சென்னை)
சின்னம்மா சசிகலாவின் திருவுருவப்படம்
திறந்து வைக்கப் படுகிறது. சசிகலாவுக்கு மட்டுமே
மக்கள் செல்வாக்கு இருப்பதால் இந்த முடிவு என்று
ஒரு மூத்த காம்ரேடு தெரிவித்தார்.

3) மேலும் மக்கள் செல்வாக்கு இல்லாத கபோதி
காரல் மார்க்ஸ், பரதேசி லெனின் ஆகியோரின்
ராசி இல்லாத படங்களை உடைத்து, குப்பைத்
தொட்டியில் வீசி எறிய முடிவு செய்திருப்பதாகவும்
அந்த காம்ரேடு மேலும் தெரிவித்தார்.

4) திறப்பு விழாவுக்கு சுதாகர் ரெட்டி வரவிருப்பதாகவும்
வளர்ப்பு மகன் சுதாகரன் சிறப்பு விருந்தினராகப்
பங்கேற்றுச் சிறப்புச்  செய்ய இருப்பதாகவும் அந்த
மூத்த காம்ரேடு மேலும் தெரிவித்தார்.

5) பேசிக்கொண்டு இருக்கும்போதே வெளிமாவட்ட
காம்ரேடுகள் பின்வரும் கோஷங்களை முழங்கிக்
கொண்டு பாலன் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

காரல் மார்க்ஸ் மயிரேபாத்!
லெனின் மயிரேபாத்!
சின்னம்மா ஜிந்தாபாத்!


*********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக