புதன், 21 டிசம்பர், 2016

ரெட்டிகள் புழல் சிறையில் அடைப்பு!
முதல் வகுப்பு வழங்குகிறார் ஜெயிலர்!
ஏ.சி. வசதியை மறுத்து மனித உரிமையை மீறும்
புழல் சிறையின் தலைமை அதிகாரி ஒழிக!
------------------------------------------------------------------------------------
1) இன்று 21.12.2016 மாலை 6.50 மணியளவில் இரண்டு
ரெட்டிகளும் புழல் சிறையில் அடைக்கப் பட்டனர்.

2) சிறையில் முதல் வகுப்பு உறுதி என்றாலும்,
ஏ.சி. அறையிலேயே இருந்து பழக்கப்பட்ட ரெட்டிகளுக்கு
சிறையில் ஏ.சி வசதியை மறுப்பது நியாயம் அல்ல.

3) இது மிக்க கொடிய மனித உரிமை மீறல் ஆகும்.

4) ஏ.சி வசதிக்கு ஆகும் செலவை ரெட்டிகள் ஏற்றுக்
கொள்ளத் தயாராக உள்ளனர். அது மட்டுமல்ல,
புழல் சிறையின் மொத்த மின்சாரக் கட்டணத்தையே
ரெட்டிகள் செலுத்தத் தயார் என்று மனித உரிமை
வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

5) மனித உரிமைப் போராளிகளே அணி திரளுங்கள்!
நாளை காலை 10 மணிக்கு புழல் சிறையை முற்றுகை
இடுவோம்!

வேண்டும் வேண்டும் ஏ.சி வேண்டும்!
ரெட்டிகளுக்கு ஏ.சி வேண்டும்!
புழல் சிறையில் ஏ.சி வேண்டும்!
**************************************************************

வருமானவரித் துறையினரின் மதிப்பீட்டின் படி,
இதுவரை தெரிய வந்துள்ள சேகர் ரெட்டியின்
சொத்து மதிப்பு ரூ 1000 கோடி ஆகும். இதில் பினாமி
பெயரில் உள்ள சொத்துக்கள் சேர்க்கப் படவில்லை.
இப்படிப்பட்ட பெருங் கோடீஸ்வரனுக்கு ஏ.சி வசதியை
மறுக்கிற ஜெயிலர், உமது மாதச் சம்பளம் என்ன?
பிடித்தம் போக, ரூ 50,000 வருமா? அற்ப நாயே,
ரெட்டிக்கு ஏ.சி வழங்கு!

பட்டதாரியாக இருந்தால், முதல் வகுப்பு வழங்கலாம்
என்று சிறைச் சட்டம் (JAIL MANUEL) கூறுகிறது. ஆனால்,
மேதகு சேகர் ரெட்டி ஒரு தற்குறி ஆவார். அவர் நாலாம்
வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். என்றாலும் அவர்
வரி செலுத்துகிறவர் என்ற அடிப்படையில் முதல்
வகுப்புக்கு அருகதை உடையவர். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக