புதன், 21 டிசம்பர், 2016

வலையில் சிக்கிய திமிங்கலங்கள்!
கண்ணீர் சிந்தும் மூடர்கள்!!
-------------------------------------------------------------------
1) இப்போது மாட்டியிருக்கும் சேகர் ரெட்டியும்
ராம மோகன்ராவும் லேசுப்பட்டவர்கள் அல்ல.
மிகப் பெரிய திமிங்கலங்கள்.

2) எல்லா மாநிலங்களிலும் ஊழலும் முறைகேடாகச்
சொத்து சேர்ப்பதும் இயல்பானதே. என்றாலும்
தமிழ்நாட்டைப் போல இவ்வளவு ராட்சஸத் தனமான
ஊழல் எங்கும் கிடையாது.

3) மாட்டிக் கொண்ட  ரெட்டி-ராவ் கும்பல் மீது
நேரடியாகவோ மறைமுகமாவோ அனுதாபம்
காட்டுவது அடிமுட்டாள்தனம் மட்டுமல்ல,
கயமையும் ஆகும்.

4) மாநில சுயாட்சி என்பது சொத்துக் குவிப்பதற்கும்
கறுப்புப்பணம் சேர்ப்பதற்கும் அல்ல.

5) இப்போது இவர்கள் பிடிபட்டு இருந்தாலும், இந்த
சொத்துக்களைப் பறிமுதல் செய்வதோ, அல்லது,
அபராதம் விதிப்பதோ, அல்லது தண்டனை பெற்றுத்
தருவதோ சுலபம் அல்ல. இந்திய நீதித்துறையை
வைத்துக் கொண்டு இதையெல்லாம் நடைமுறைப்
படுத்த முயல்வது கடினம்.

6) எனவே எவ்வித நிபந்தனையும் இன்றி, இந்த
நடவடிக்கைகளை ஆதரிப்பது அவசியம்.

7) ஜெயலலிதா உயிரோடு இருந்தால் இந்த மாதிரி
ரெயிடுகளை கனவிலும் நினைத்துப் பார்க்க
முடியாது. இது காலம் வழங்கி உள்ள வாய்ப்பு.

8) புல்லில் சிந்திய தவிடு போலவும், அவிழ்த்து விடப்பட்ட
நெல்லிக்காய் மூட்டையைப் போலவும் அதிமுக
உடைந்து சிதறுவது காலத்தின் கட்டாயம். அதற்காகக்
கண்ணீர் சிந்துபவன் முழுமூடன்.

9) பல்வேறு காட்சிகளிலும் உள்ள குட்டி முதலாளித்துவ
அரைவேக்காடுகளும் அசடுகளும் திருந்த வேண்டும்.
அதிமுகவுக்கு வக்காலத்து வாங்குவது மலத்தைத்
தின்பதற்குச் சமம். பாஜக யோக்கியமானதா என்ற
கேள்வியை இப்போது கேட்பது ஊழல் திமிங்கலங்கள்
தப்பிப்பதற்கே வழி வகுக்கும்.

10) சேகர் ரெட்டிக்கும் ராவுக்கும் ஓபிஎஸ்ஸுக்கும்
சசிகலாவுக்கும்  முட்டுக்  கொடுப்பதை விட
தற்கொலை பண்ணிச் செத்துப் போவதே நல்லது.
********************************************************************
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக