சனி, 31 டிசம்பர், 2016

உண்மைக்குப் புறம்பான புள்ளி விவரங்கள்!
----------------------------------------------------------------------------------
செந்தலை கௌதமன் ஐயா,
மண்டல் பரிந்துரைகள் செயலாக்கம் பெற
ஆனைமுத்து ஐயா அவர்கள் ஆற்றிய பணியினை
அறிந்தோர் பலர். அக்காலத்தில் மண்டல்
பரிந்துரைகளைச் செயலாக்கக் கோரி சென்னையில்
நடைபெற்ற ஓர் ஊர்வலத்தில் ஐயா அவர்கள்
தலைமையேற்றுச் செல்ல, அவருக்கு அருகில்
 தலை முழக்கங்களை எழுப்பியவாறு இந்த
எளியவன் சென்றதை இன்றும் பெருமையுடன்
நினைவு கூர்கிறேன். நிற்க.
**
தங்களின் பதிவில் தாங்கள் மேற்கோள் காட்டியுள்ள
புள்ளி விவரங்கள் உண்மையன்று என்பதைச் சுட்டிக்
காட்ட விழைகிறேன். நடுவண் அரசின் பணிகளில்
பிற்பட்டோரின் விழுக்காடு குறித்த அந்தப் புள்ளி
விவரம் உண்மை நிலையை உரைக்கவில்லை.
**
என்னைப்  போன்ற பல்லாயிரக் கணக்கானோர்
நடுவண் அரசில் பணிக்குச் சேர்ந்த போது, நாங்கள்
அனைவரும் பொதுப்போட்டி மூலம் பணி பெற்றோர்
 (OC) என்ற பட்டியலிலேயே வைக்கப் பட்டோம்.
ஏனெனில் அப்போது நடுவண் அரசில் பிற்பட்டோர்
ஒதுக்கீடு இல்லை. எங்களின் சேவைப் புத்தகம்
(SERVICE BOOK) முழுவதிலும் பணிஓய்வு பெறும் வரை
பொதுப்போட்டியினர் என்ற வகைமையிலேயே
இருந்தது. இன்றும் இருந்து வரும் நடைமுறையே இது.
**
நடுவண் அரசின் தொலைத்தொடர்புத் துறையில்,
ஒரு பிரிவில் (UNIT) 100 பேர் தற்போது பணியில்
இருப்பதாகக் கொள்ளவும். இவர்களில் குறைந்தது
60 பேர் பிற்பட்டோர்.இதுதான் உண்மை நிலை.
என்றாலும், புள்ளி விவரங்களில், பிற்பட்டோருக்கான
இட ஒதுக்கீட்டின் கீழ் பணி பெற்றோர் மட்டுமே
பிற்பட்டோராகக் கருதப் படுகின்றனர். எங்களைப்
போன்றோர் பொதுப்போட்டியினராகவே அதாவது
பிற்பட்டோர் அல்லாதவராகவே பார்க்கப்
படுகின்றனர். அவ்வாறே புள்ளி விவரங்கள்
தயாரிக்கப் படுகின்றன.
**
எனவே நடுவண் அரசின் பணிகளில் பிற்பட்டோர்
விழுக்காடு குறைவு என்ற கூற்று உண்மையன்று.
மேலும் தொழிற்சங்கங்களும்  பிற்பட்டோர்
நலச் சங்கங்களும் விழிப்புடன் இருந்து, ஒவ்வோர்
ஆளெடுப்பையும் (RECRUITMENT) கண்கொத்திப்
பாம்பாய்க் கண்காணித்து வருகிறோம். எங்களை
மீறி, ஒதுக்கீட்டை எவராலும் அபகரிக்க இயலாது.     
            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக