வியாழன், 29 டிசம்பர், 2016

முட்டாள்தனத்தின் உச்சம்!
ஒருவருக்குக் கூடவா மூளை இல்லை!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
மறைந்த ஜெயலலிதா அவர்களுக்கு உலக அமைதி
என்ற துறையின்கீழ் நோபல் பரிசு வழங்க வேண்டும்
என்று இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில்
தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

இது முட்டாள்தனமான தீர்மானம் ஆகும். ஏனெனில்,
நோபல் பரிசு வழங்குவதற்கான சட்ட திட்டப்படி,
இறந்துபோன ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்
படுவதில்லை. There is no posthumous Nobel prize.
(posthumous = இறந்த பிறகு வழங்கப் படுதல்)

ஒவ்வோராண்டும் நோபல் பரிசு அக்டொபர் மாதத்தில்
அறிவிக்கப்பட்டு டிசம்பர் 10 அன்று வழங்கப்படும்.
இதுதான் நடைமுறை.

இறந்து போன ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்
படுவதில்லை என்ற உண்மை அதிமுகவில் ஒருவருக்குக்
கூடவா தெரியவில்லை? அல்லது எவரேனும் ஒன்றிரண்டு
பேருக்குத் தெரிந்து இருந்தாலும், தீர்மானம் இயற்றுவது
மூடர்களுக்குத்தான் என்பதால் தெரிந்தே தவறான
தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்களா?

என்றாலும், நிகழ்தகவுக் கோட்பாட்டின்படி, நோபல்
பரிசு இறந்து போனவர்களுக்கு வழங்கப் படுவதில்லை
என்ற விவரம் தெரிந்தவர்கள் அதிமுகவில் ஒருவர் கூட
இல்லை என்பதற்கான நிகழ்தகவு 1 ஆகும்.
The required probability =1.
*****************************************************************  
விவரம் தெரிந்தவர்கள் பூஜ்யம் மட்டுமே என்பது
உறுதியான நிகழ்வு. உறுதியான  நிகழ்வுக்கான
நிகழ்தகவு =1 (The probability of a sure event = 1),


ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கான
நிகழ்தகவு பற்றி நமது பதிவு பேசவே இல்லை.
அதிமுகவில் நோபல் பரிசு பற்றிய விவரம் தெரிந்தவர்கள்
பற்றிய நிகழ்தகவு பற்றி மட்டுமே நமது பதிவு பேசுகிறது.
அதிமுகவில் விவரம் தெரிந்தவர்கள் எவரும் இல்லை
என்று பதிவு கூறுகிறது. அதிமுகவில் விவரம்
தெரிந்தவர்கள் ஒருவர் கூட இல்லை என்பது உறுதியான
நிகழ்வு (sure event). இதற்கான நிகழ்தகவு =1.
  

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக