வியாழன், 15 டிசம்பர், 2016

வைகோ மோடி சந்திப்பு!
மொழிச் சிறுபான்மையினரின்
நலன் பேணும் நடவடிக்கை!
---------------------------------------------------------------------------------------------------------------
1) இந்தியாவின் சிறந்த தொழிலதிபர்களும் லட்சக்
கணக்கான மக்களுக்கு வேலை வழங்கி அவர்களின்
வீட்டில் அடுப்பு எரிய வகை செய்து தேச சேவை புரிந்து
வரும் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி போன்ற
தொழிலதிபர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும்
வருமானவரித்  துறையானது சோதனை என்ற பெயரில்
துன்புறுத்தி வருகிறது.

2) இதனால் தமிழ்நாட்டில் வாழும் மொழிச்
சிறுபான்மையரின் பாதுகாப்பு கேள்விக்குறி
ஆகியுள்ளது. எனவே மொழிச் சிறுபான்மையினரின்
நலம் பேணும் விதத்தில் வருமானவரித்துறை
தன்னுடைய சோதனையை உடனடியாகக்
கைவிட வேண்டும். ஏற்கனவே கைப்பற்றிய
கரன்சி நோட்டுகள் மற்றும் தங்கம் ஆகியவை
உள்ளபடியே வெள்ளைப்பணம் ஆகும். எனவே
அதற்குரிய 30 சதம் வருமானவரியைப் பிடித்துக்
கொண்டு, மீதிப்பணத்தை ரெட்டி சகோதரர்களிடம்
உடனே ஒப்படைக்க வேண்டும்.

3) சேகர் ரெட்டியை கைது செய்யக் கூடாது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தவே வைகோ
பிரதாமரைச் சந்தித்தார் என்று ரெட்டி சகோதரர்களின்
தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பெயர் வெளியிட
விரும்பாத ஒரு ஆடிட்டர் இத்தகவலைத் தெரிவித்தார்.
சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததும் ரெட்டி சகோதரர்களே
என்று அவர் மேலும் தெரிவித்தார்.
********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக