ஞாயிறு, 11 டிசம்பர், 2016

திமுகவினர் பரப்பும் கேவலமான வதந்தி!
அண்ணன் வைகோ கடும் கண்டனம்!
----------------------------------------------------------------------------
வீரமங்கை வேலு நாச்சியாரைப் போல வாழ்ந்து,
தமிழக அரசியலில் அழியாத தடத்தை என்றென்றும்
விட்டுச் சென்றிருக்கும், எட்டுக்கோடி மக்களின்
இதய தெய்வமாகத் திகழும் புரட்சித் தலைவி
அன்புத் சகோதரி ஜெயலலிதா அவர்களின்
மறைவுக்குப் பின்னால், உணர்வு பூர்வமாக நான்
அதிமுக தொண்டனாக என்னைப் பதிவு செய்து
கொண்டு விட்டேன்.

இந்த உண்மை நன்கு தெரிந்திருந்த போதும்,
வேண்டுமென்றே என் புகழை அழிக்கும் முகமாக,
திமுகவினர், நான் இன்னும் மதிமுகவைச் சேர்ந்தவன்
என்று கேவலமான முறையில் வதந்தி பரப்பி  
வருகின்றனர். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வைகோ என்னும் நான் மதிமுகவைச்
சேர்ந்தவன் என்று திமுகவினர் பரப்பி வரும்
வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று
உங்களின் பொற்பாதங்களைத் தொட்டு, வேண்டி
விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
வைகோ.
************************************************************************ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக