செவ்வாய், 27 டிசம்பர், 2016

தாராளமாகச் செய்ய இயலும்.  இந்த விஷயத்தில்
ராமச்சந்திர மேனன் கரை கண்டவர். திருச்செந்தூரில்
அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை கொலையுண்டார்.
இதைக் கண்டித்து நீதி கேட்டு நெடும்பயணம்
போனார் கலைஞர். கலைஞரின் அழுத்தம் காரணமாக
பால் கமிஷனை அமைத்தார் மேனன். பால் கமிஷனின்
அறிக்கை மேனனுக்கு எதிராக அமைந்தது. எனவே மேனன்
அதை மறைத்தார். ஆனால் கலைஞர் அதை வெளியிட்டு
விட்டார்.
**
உடனே மேனன் என்ன செய்தார் தெரியுமா?
மொழிபெயர்ப்புத் துறை இயக்குனரான ஐ.ஏ.எஸ்
அதிகாரி நடராசன் என்பவரைக் கைது செய்தார்.
மேலும் நடராசனை போலிஸைக் கொண்டு
அடித்து சித்திரவதை செய்தார். மேனன் ஒரு சேடிஸ்ட்.
**
ஆளுமை மிக்க அரசியல்வாதிகள் முன்பு ஐ.ஏ.எஸ்
அதிகார வர்க்கம் மண்டியிடும். எதிர்த்து நிற்பவர்கள்
பழிவாங்கப் படுவார்கள். இதற்கு நூற்றுக் கணக்கில்
உதாரணங்கள் உள்ளன.  


சின்ன மீனைப் பெரிய மீன் விழுங்கும். அது போல
கூடுதலான அதிகாரம் குறைவான அதிகாரத்தை
விழுங்கி விடும். மேனன், ஜெயலலிதா ஆகியோர்
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கட்டி வைத்து அடித்தவர்கள்.
பயங்கரமான சேடிஸ்டுகள். ஆதாரமோ காரணமோ
பலவீனமானவை என்றும் அவை ஏற்க இயலாதவை
என்று நீதிமன்றம் பின்னர்தான் முடிவு செய்யும்.
எனவே முதல்வரோ அல்லது ஆற்றல் மிக்க
அமைச்சரோ நினைத்தால், ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை
சுலபத்தில் கணக்குத் தீர்க்க முடியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக