செவ்வாய், 15 நவம்பர், 2016

மூக்கறுப்பு-1
--------------------------
வேலூர் கோவில் உண்டியலில் ரூ 44 லட்சம்
கறுப்புப் பணம் காணிக்கை!
--------------------------------------------------------------------------------
வேலூரில்  ஜலகண்டேஸ்வரர் என்ற கடவுள் உள்ளார்.
இவர் தினமும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும்
கடமையைச் செய்து வருபவர். இவரின் கோவில்
உண்டியலில் தினமும் ரூ 4000 முதல் ரூ 10,000 வரை
பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம்.

 மோடி அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, யாரோ
ஒரு கருப்புப்பண முதலை சனிக்கிழமையன்று
(12.11.2016) ரூ 44 லட்சம் தொகையை ரூ 500 மற்றும்
ரூ 1000 நோட்டுகளாக உண்டியலில் காணிக்கை
செலுத்தி விட்டார்.

இந்த ரூ 44 லட்சம் பணமும் SBI வங்கியில் செலுத்தப்
படும் என்று கோவிலின் தர்மகர்த்தா திரு குமார்
தெரிவித்தார்.

எல்லா ஏடுகளிலும் இச்ச்செய்தி வந்துள்ளது.
இங்கு டைம்ஸ் ஆப்  இந்தியா செய்தியை
ஆதாரமாகக் காட்டி உள்ளோம்.

கறுப்புப் பணம் ஒரு பைசா கூட யாரிடமும்
இல்லை; எல்லோரும் சொத்தாக மாற்றி விட்டார்கள்
என்று பேசித் திரிந்தவர்களுக்கு இச்செய்தி
ஒரு மூக்கறுப்பு.

******************************************************************
பின்நவீனத்துவ நபர்களுக்கு அவர்களுக்கு உறைக்கும்
விதத்தில் விடை சொன்னபோது பயன்படுத்திய சொற்களை
இப்பதிவுடன் சேர்த்து முடிச்சிட்டு வேண்டாம் என்பது
என் தாழ்மையான வேண்டுகோள்.

ரொக்கப் பணமாக உள்ள கறுப்புப் பணம் 6 சதம்
என்று தாங்கள் கூறுகிறீர்கள். உண்மையில் தங்களின்
கணிப்பு சற்று முன் பின்னாக இருக்கலாம். அதிக அளவில்
பத்து சதம் என்று கொள்ளலாம். ஆனால் கறுப்புப்
பணம் ரொக்கமாக இல்லை என்றும் இல்லவே இல்லை
என்றும் அடித்துப் பேசும் நபர்களை என்ன செய்வது?
ரஜனிகாந்த்திடம் ரொக்கமாக இல்லையா? விஜய காந்திடம்
ரொக்கமாக இல்லையா? மாறன் சகோதரர்களிடம் ரொக்கமாக இல்லையா?   மன்னார்குடி சசிகலா வகையறாக்களிடம்
ரொக்கமாக இல்லையா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக