புதன், 9 நவம்பர், 2016

எனக்காக தியாகம் செய்யும்
குட்டி முதலாளித்துவப் போலி முற்போக்குகள்!
-------------------------------------------------------------------------------------
1) என் பெயர் உங்களுக்கு முக்கியமில்லை. அது
கேப்பியார் அல்லது பச்ச சுத்து.. அல்லது இப்படி
எதுவாகவும் இருக்கலாம். 

2) நான் பல சுயநிதிக் கல்லூரிகளையும் நிகர்நிலைப்
பல்கலைகளையும் நடத்தி வருகிறேன். ஜூலை,
ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் எங்களுக்கு அறுவடைக்
காலம். ஏனென்றால் இவை அட்மிஷன் மாதங்கள்.
இப்போது செப்டம்பர் 30இல்தான் MBBS அட்மிஷன்
முடிவடைந்தது. பணம் கோடி கோடியாகக்
கொட்டி உள்ளது.

3) இந்தப் பணம் இன்னும் எதிலும் முதலீடு செய்யப்
படவில்லை. அதற்கு நேரமில்லை. எனவே கரன்சி
நோட்டுகள், எல்லாம்  1000 ரூ நோட்டுகள்தான்.

4) என்னுடைய சில வீடுகளில், வீட்டையே கோடௌன்
ஆக்கி, இந்த ரூ 1000 நோட்டுகளால் ஆன, கோடிக்
கணக்கான ரூபாய்களைப் பதுக்கி வைத்திருக்கிறேன்.

5) தற்போது மோடியின் அறிவிப்பால், இந்தக் கோடிக்
கணக்கான ரூபாய்கள் செல்லாமல் போய்விட்டன.
இருந்தாலும் நான் வருத்தப் படவில்லை. வியாபாரத்தில்
என்னதான் ஜாக்கிரதையாக இருந்தாலும், சில
நேரங்களில் நஷ்டம் ஏற்படத்தான் செய்யும்.

6) இருந்தாலும் எனக்கு ஒரு சந்தோசம்! கறுப்புப்
பணத்தோடு எந்த விதமான சம்பந்தமும் இல்லாத,
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சில பைத்தியக்காரப்
பயல்கள், எங்களைப் போன்ற கருப்புப்பண
முதலைகளுக்கு ஆதரவாக எழுதுவதைப் படிக்கப்
படிக்க எனக்கு சந்தோசம் அதிகரிக்கிறது.

7) இவர்களைப் போன்ற குட்டி முதலாளித்துவ மூடர்கள்
எங்களுக்கு ஆதரவாக இருக்கும்போது. மோடி என்ன,
எந்தக் கொம்பனாலும் எங்கள் மயிரைக் கூடப்
பிடுங்க முடியாது என்று நினைக்கும்போது
மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இப்படிக்கு,
கேப்பியார்
நிகர்நிலைப் பல்கலை வேந்தர்.
-----------------------------------------------------------------------------------------------------------

                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக