செவ்வாய், 1 நவம்பர், 2016

போலீஸ் இன்பார்மரின் மொட்டைக் கடிதம்!
---------------------------------------------------------------------------------
போலீஸ் இன்பார்மர் (police informer) கட்டுரை எழுதினால்,
எப்படி எழுதுவான் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக
"மாற்று டாட் காம்" கட்டுரை உள்ளது. 1970-80களில் இந்தியா
முழுவதும் நக்சல்பாரி எழுச்சி பெருவீச்சுடன் பரவி
இருந்த நேரம். தமிழ்நாட்டில், ராமச்சந்திர மேனன்,
மோகன்தாஸ், தேவாரம் காட்டு மிராண்டி கும்பல்
வெறி பிடித்து அலைந்த நேரம். இந்த கும்பல், காசு
கொடுத்து பல போலீஸ் இன்பார்மர்களை உருவாக்கி
உலவ விட்டு இருந்தது.
**
கோழைகளான இந்த போலீஸ் இன்பார்மர்கள், கியூ
பிராஞ்சு அதிகாரிகளுக்கும், அவர்களின் தூண்டுதலின்
பேரில், புரட்சிகர இயக்கங்களில் வேலை செய்யும்
தோழர்களின் உயர் அதிகாரிகளுக்கும் புகார்களையும்
மொட்டைக் கடிதங்களையும் எழுதுவார்கள்.
**
அப்படி எழுதப்பட்ட ஒரு மொட்டைக் கடிதம் எப்படி
இருக்கும் என்றால், மாற்று டாட்காமில் வெளியான
இந்தக் கட்டுரை போலத்தான் இருக்கும். ஊழியரின்
பெயரை வெளிப்படையாகச் சொல்லி, அவரின்
தவறுகளை (தவறுகள் இருந்தால்) பகிரங்கமாக
எழுதுவது என்பது இந்தக் கோழைகளிடம் கிடையாது.
**
பயம், அச்சம். கடைசியில் புழுவினும் கீழான
இந்தக் கோழைகள் அம்பலப் பட்டுப் போனார்கள்.
மாற்று டாட் காமின் கோழை எழுதிய இந்த
மொட்டைக் கடிதத்தை மலத்தில் வீசி எறிகிறோம்.
அதைக் கொண்டு வந்து இங்கே போடும் போலீஸ்
இன்பார்மர்களின் எடுபிடிகளையும்  சேர்த்து..   
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக