புதன், 23 நவம்பர், 2016

மக்களின் துயருக்கு விடிவுதான் என்ன?
----------------------------------------------------------------------
ஸ்டேட் வங்கி அதிகாரியின் ஆணவமும் திமிரும்!
அறிவு இருக்கா? காதுலே ஈயத்தக் காச்சி
ஊத்தியிருக்கீங்களா என்றெல்லாம் மக்களைக்
கேட்கும் அதிகாரி!
இந்த வீடியோவைக் காணுங்கள்!
இந்த அதிகாரியின் சம்பளம் குறைந்தது மாதம்
ரூ ஒரு லட்சம் இருக்கும்!
-------------------------------------------------------------------------------------  

இந்த வீடியோவில் காணப்படும் நபர் SBI வங்கி
வேலூர் நாட்றாம்பள்ளி கிளையில் AGM அந்தஸ்தில்
(Asst General Manager) பணிபுரிவதாக வாசகர்கள்
தெரிவிக்கிறார்கள்.  
ஸ்டேட் வங்கி நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டிய
பொதுத்துறை நிறுவனம். பாதுகாக்க வேண்டிய
பொதுத்துறை நிறுவனம். ஆனால் அதிகாரியின்
இந்த நடத்தை கண்டனத்துக்கு உரியது.

இந்த வீடியோ நிச்சயம் பெரிய அளவில் பரவும்;
பரவி வருகிறது. எனவே இந்த அதிகாரி சஸ்பெண்ட்
செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.


சட்டமன்றத் தேர்தல் (2016) முடிந்து விட்டது. இனி அடுத்து
வரவிருப்பது 2019 நாடாளுமன்றத் தேர்தலே. இடையில் வேறு
தேர்தல்கள் கிடையாது. உள்ளாட்சித் தேர்தல் பற்றி
சோனியா துளியும் அக்கரைப் பட மாட்டார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு கூட்டணி வேண்டும். அது தற்போது உள்ள திமுக கூட்டணிதான்.
எனவே காங்கிரஸ் தனித்து நிற்பது என்பது அக்கட்சியின்
எதிர்கால வரலாற்றில் இல்லை. காங்கிரசின் வாழ்வும்
தாழ்வும் திமுகவைச் சார்ந்தே உள்ளது. எனவே காங்கிரசை
தனியொரு கட்சியாகக் கருத அக்கட்சி இடம்
தரவில்லை. அது திமுகவின் ஒரு பிரிவு அவ்வளவே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக