சனி, 19 நவம்பர், 2016

கல்வித்  தந்தை ஜேப்பியாரின் கல்லூரியில்
பிடிபட்ட ரூபாய் எட்டுக்கோடி!
---------------------------------------------------------------------------
கல்வித் தந்தை ஜேப்பியாரின் செயின்ட் ஜோசப்
பொறியியல் கல்லூரியில் ரூபாய் எட்டுக்கோடி
ரொக்கப்பணம் கைப்பற்றப் பட்டது. இச்செய்தி
தற்போது (19.11.2016) எல்லா டி.வி சானல்களிலும்
சொல்லப்பட்டு வருகிறது.

இச்செய்தி வெளியானதும் மீதியுள்ள கல்வித்
தந்தைகள் தங்கள் கல்லூரியில் பதுக்கி வைக்கப்
பட்டிருந்த நோட்டுக்களை அப்புறப் படுத்தி
விட்டனர்.

கல்வித் தந்தைகள் வாழ்க! மோடி ஒழிக!
------------------------------------------------------------------------------------------     

மானங்கெட்ட மோடியே ராஜினாமா செய்!
-------------------------------------------------------------------------------
கல்வித் தந்தை ஜேப்பியாருக்கு இழைக்கப்பட்ட
"அநீதி"யைக் கண்டித்தும் மோடி உடனடியாக பிரதமர்
பதவியில் இருந்து ராஜினாமா செய்யக் கோரியும்
நாளை காலை 10 மணி முதல் சென்னை வள்ளுவர்
கோட்டத்தில் சாகும் வரை உண்ணாவிரதம்
இருக்கிறேன். அனைவரும் வள்ளுவர் கோட்டம்
நோக்கி அலை அலையாகத் திரண்டு வருமாறு
வேண்டுகிறேன்.


கல்விக் கொள்ளையர்கள் அனைவருமே
விதிவிலக்கின்றி மக்கள் விரோதிகள்.
இதில் மதத்தின் அடிப்படையில்
ஒருவருக்கு ஆதரவு அளிப்பது தவறு. யார்
பிடிபட்டாலும் வரவேற்பது மக்களை நேசிப்போரின்
கடமை. கிறிஸ்துவ மாணவர்களுக்கு மட்டும்
இலவசக் கல்வியா வழங்குகிறார் ஜேப்பியார்?
சுரண்டல் பேர்வழி எப்போதாவதுதான் மாட்டுவான்
அப்படி மாட்டுவது அபூர்வம். அப்படி மாட்டுகிற
நேரத்தில், அவனை ஆதரிப்பது சரியல்ல. . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக