ஞாயிறு, 20 நவம்பர், 2016

வாழ்க நீ எம்மான்!
கறுப்புப் பணத்தை ஆதரிக்கும் அகிலேஷ் யாதவ்!
--------------------------------------------------------------------------------------------
கறுப்புப் பணத்தை ஆதரித்து கருத்துத் தெரிவித்து
புரட்சியை ஏற்படுத்தி உள்ளார் உ.பி முதல்வர்
அகிலேஷ் யாதவ்.

"உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது, உலகில்
பல நாடுகள் வீழ்ந்தன. ஆனால் இந்தியாவில் எத்தகைய
பாதிப்பும் இல்லை. அதற்கு காரணம் கறுப்புப் பணமே.
கறுப்புப்பணம் இந்தியப் பொருளாதாரம் விழுந்து
விடாமல், ஒரு இணையான பொருளாதாரமாக (PARALLEL
ECONOMY) இருந்து இந்தியாவைக் காப்பாற்றியது." 

இவ்வாறு கறுப்புப் பணத்திற்கு ஆதரவாகக் கருத்துத்
தெரிவித்து உள்ளார் அகிலேஷ் யாதவ்.

இவரின் கருத்து முட்டாள்தனமான கருத்து. இந்தியப்
பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தியது கறுப்புப்
பணம் அல்ல. பொதுத்துறை நிறுவனங்களே ஆகும்.

நிற்க. இவ்விஷயத்தில் வாதம் எதுவும் தேவையில்லை.
கறுப்புப் பணத்தை நேரடியாக ஆதரித்து கருத்துக்
கூறிய அகிலேஷ் யாதவ் அவர்களை பாராட்டுவோம்.
கறுப்புப் பணம் சேர்ப்போம்! கறுப்புப் பணம் வாழ்க!

அகிலேஷ் யாதவ் அவர்களே!
வாழ்க நீ எம்மான்!!
**********************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக