செவ்வாய், 15 நவம்பர், 2016

இதுதாண்டா கறுப்புப் பணம்!
கறுப்புப்பணம் ரொக்கமாக இல்லை என்று
பேசித் திரியும் கனவான்களுக்கு!
--------------------------------------------------------
இந்தப் படத்தில் ரூபாய் நோட்டுகளில் படுக்கை
அமைத்து, அதில் படுத்துப் புரள்பவர் யார் தெரியுமா?
திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் தலைவர் சமர் ஆச்சார்ஜி.
ஒரு கான்டராக்டில் இவருக்கு இரண்டரை கோடி ரூபாய்
கமிஷன் கிடைத்தது. உடனே கோடியில் புரள
ஆரம்பித்தார் இந்த மார்க்சிஸ்ட்.
(நன்றி: வினவு இணையதளம் வெளியிட்ட கட்டுரை)


இக்கட்டுரை மார்க்சிய லெனினிய இணையதளமான
"வினவு" இணையதளத்தில் வெளியான கட்டுரை என்பதை
அறிக.  கட்டுரையில் மிகத் தெளிவாக அவர் மீது
நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்பதையும்
வினவு கட்டுரையாளர் எழுதி இருக்கிறார். உங்களின்
தயிர்சாதக் கண்ணோட்டம் காரணமாக இதை
நீங்கள் பார்க்க மறுக்கிறீர்கள்.
**
அடுத்து, உங்களின் விமர்சனம் கண்ணியமாக இல்லை.
வசவு மட்டுமே உங்களின் பதில் என்றால், உங்களைத்
தண்டிக்க, நீங்கள்  எனக்கு உரிமை வழங்கி விடுகிறீர்கள்
என்று பொருளாகி விடுகிறது. தண்டனை வழங்கும்
என்னுடைய உரிமையை நான் பயன்படுத்தும்
அளவுக்கு என்னைத் தள்ளி விட வேண்டாம்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக