வியாழன், 17 நவம்பர், 2016

விஜய் மல்லையா மீது ஸ்டேட் வங்கி எடுத்த
நடவடிக்கைகள் பற்றி அறிவோம்!

1) பிற வங்கிகளுடன் இணைந்து ஸ்டேட் வங்கி
மல்லையா மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பு சார்பாக
வழக்குத் தொடரப்பட்டு, பொருளாதாரக் குற்றப்
பிரிவு மற்றும் அமலாக்கப் பிரிவுடன் இணைந்து
ஸ்டேட் வங்கி வழக்கை நடத்தி வருகிறது.

2) இதன் விளைவாக மல்லையா தேடப்படும்
குற்றவாளியாக (proclaimed offender) அறிவிக்கப்
பட்டுள்ளார்.

3) அவரின் 9000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள்
முடக்கப்பட்டு உள்ளன (attached)

4) ஸ்டேட் வங்கிக்கு மல்லையா கடன் பட்ட தொகை
ரூ 1200 கோடி. அவரின் முடக்கப் பட்ட சொத்தின்
மதிப்போ 9000 கோடி.

5) தாவூத் இப்ராஹிமைப் போல, விஜய் மல்லையாவும்
தேடப்படும் குற்றவாளி ஆகியுள்ளார்.

விஜய் மல்லையா தப்ப முடியுமா?
------------------------------------------------------------------
கடனைத் திரும்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா
தப்ப முடியுமா? முடியும்; அதற்கு அவர் மஞ்சள் கடுதாசி
எனப்படும் திவால் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.
In that case he will become an UNDISCHARGED INSOLVENT. That is
nothing but Vijay Malliyaa UNBECOMING of himself.

வெண்ணிற ஆடை நிர்மலா என்ற சினிமா நடிகையை
எம் ஜி ராமச்சந்திர மேனன் தமிழக மேலவையின்
உறுப்பினராக (MLC) அறிவித்தார். அனால் நிர்மலா
மஞ்சள் கடுதாசி கொடுத்தவர் என்பதால், அன்றைய
தமிழக ஆளுநர் எஸ்.எல்.குரானா, நிர்மலாவை
மேலவை உறுப்பினராக நியமிக்க முடியாது என்று
மறுத்து மேனனின் முகத்தில் கரியைப் பூசினார்.
இதனால் ஏற்கவே சுருக்கம் விழுந்த மேனன் மேலும்
மூஞ்சி சுருங்கிப் போனார்.

சர்வ சக்தி வாய்ந்தவர் என்று கருதப்பட்ட
மேனன் போன்ற முதல்வராலேயே தான் விரும்பிய
நிர்மலாவை எம்.எல்.சி ஆக்க முடியவில்லை.
இது வரலாறு.

நிர்மலாவைப் போல், மல்லையாவும் மஞ்சள் கடுதாசி
கொடுத்தால் மட்டுமே, வங்கிகளில் இருந்து அவர்
வாங்கிய கடனைச் செலுத்தாமல் தப்பிக்க முடியும்.
வேறு வழி எதுவும் அவருக்கு இல்லை.

ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளை முட்டாள்களும்
கோமாளிகளும் நடத்தவில்லை. வாராக்கடனை
வசூலிக்கும் வித்தை தெரியாமல் அவர்கள் வங்கி
நடத்தவில்லை, எனவே விஜய் மல்லையா தப்ப
முடியாது, 

      


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக