வியாழன், 24 நவம்பர், 2016

டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் புகழ் பெற்ற
முதலாளித்துவப் பொருளாதார நிபுணர். He is more an
ECONOMIST than a politician. ஆனால் மோடி எந்த
விதத்திலும் ஒரு பொருளாதார நிபுணர் அல்ல.
அவர் வெறும் அரசியல்வாதி மட்டுமே. இது
குறைந்தபட்ச அறிவு உள்ள ஒவ்வொருவருக்கும்
தெரியும். இதை எனது கட்டுரை அழுத்தம்
திருத்தமாகச் சொல்கிறது. இதில் எவருக்கும்
சந்தேகம் வர இயலாது. நிற்க.
**
என் கட்டுரை டாக்டர் மன்மோகன்சிங் அவர்களைக்
கேலி செய்கிறது என்று எவரும் கருத இடமில்லை.
மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் மட்டுமே அவ்வாறு
கருத இயலும்.
**
முதிர்ச்சியுள்ள வாசகர்களுக்காக எழுதப்படுகின்ற
கட்டுரைகள் இவை. அருள் கூர்ந்து பிறழ் புரிதலைத்
தவிர்க்கவும்.

இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. என்னுடைய
கட்டுரைக்கு மட்டுமே நான் பொறுப்பு. டாக்டர் மன்மோகன்
சிங் பெயரில் கேம்பிரிட்ஜ் பல்கலை ஸ்காலர்ஷிப்
வழங்குகிறது என்ற செய்தியை, பலரும் அறியாத
ஒரு செய்தியை, நான் இக்கட்டுரையில் எழுதியுள்ளேன்.
டாக்டர் மன்மோகன்சிங்கை கேலி செய்வது என்ற
பேச்சுக்கே இங்கு இடமில்லை. இதுபோன்ற அபத்தமான
வலுச்சண்டையில் நான் ஈடுபட விரும்பவில்லை.
டாக்டர் மன்மோகன்சிங் மீது எனக்கு மிகுந்த
மரியாதையும் உள்ளது; அவரின் முதலாளியப்
பொருளியலில் முரண்பாடும் உள்ளது. 

டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் மோடிக்கு
மக்களின் சிரமங்களைக் குறைக்குமாறு அறிவுறுத்தி
இருக்கிறார். அதை மோடி ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்று தெளிவாக என்னுடைய பின்னூட்டத்தில்
முன்பே எழுதி இருக்கிறேன். அதைப் பலரும்
படித்தும் இருக்கிறார்கள். அதன் பிறகும் மன்மோகன்
அவர்களைக் கேலி செய்கிறேன் என்று கூறுவது
என்ன நியாயம்?  

இக்கட்டுரையைப் படித்து விட்டு, ஒரு பாஜக ஆதரவாளர்
"மன்மோகன் ஒரு லஞ்சப் பேர்வழி" என்று பின்னூட்டம்
எழுதி இருந்தார். அந்த நிமிடமே அதைக் கண்டித்து
பதில் எழுதி உள்ளேன். மேம்போக்காக எதையாவது
அரைகுறையாகப் பார்த்து விட்டு, பொய்யாகவும்
தவறாகவும் வீண்பழி போடுவதைத் தவிர்க்கவும்.

பின்னூட்டத்தில் நீங்கள் ஒரு கருத்தை எழுதுகிறீர்கள்.
அதற்கு நான் எழுதுகிற பதிலை பின்னூட்டத்தில்தானே
எழுத முடியும்? வேறு எங்கே எழுதுவது? கக்கூசிலா?


நீங்கள் உங்கள் தவறை உணர மறுக்கிறீர்கள். உங்கள்
தவறு அம்பலப் பட்ட பின்னும் அதை ஏற்றுக் கொள்கிற
மனப் பக்குவம் இல்லை. இதுதான் உங்கள் பண்பு
என்றால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? 

உங்களுடைய கேள்விகளை, சந்தேகங்களை யாராவது
ஒரு பொருளாதார நிபுணரிடம் கேட்கவும். இந்தப் பதிவு
சார்ந்து மட்டுமே என்னால் பதில் சொல்ல இயலும்.
பதிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை என்னால்
பொருட்படுத்த இயலாது.


அடுத்தவனை இளக்காரமாகப் பார்த்து, வலுச்
சண்டைக்கு இழுத்து, உங்களின் வக்கிர புத்தியை
அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறீர்கள். உங்களோடு
மல்லுக்கு நிற்க முடியாது. நான் ஒரு பொருளாதார
நிபுணன் என்று எங்குமே கூறியதில்லை. ஆனால்
நான் கூறாத ஒன்றைக் கூறியதாக நீங்களே
கூறும்போது, உங்கள் வக்கிரபுத்தி வெளிப்படுகிறது.
**
நிற்க. இந்தக் கட்டுரை டாக்டர் மன்மோகன்சிங்
அவர்களைக் கேலி செய்கிறது என்று நம் இருவருக்கும்
பொதுவான யாராவது ஒரு நண்பர் கூறட்டும். அதன்
பிறகு நான் உங்கள் அடிமையாக இருக்கிறேன்.
அப்படி யாரும் கூறவில்லை என்றால், அதன் பிறகு
நீங்கள் உயிருடன்  இருப்பதில் ஏதேனும் அர்த்தம்
உள்ளதா என்று முடிவு செய்வோம்.



டாக்டர் மன்மோகன்சிங் அவர்களின் உரையின் முக்கிய அம்சங்களாக நான்கு அம்சங்களைக் குறிப்பிட்டு
உள்ளேன். இது முன்பே பின்னூட்டத்தில் எழுதப்பட்டு
விட்டது. அதில் முக்கிய அம்சமாக நான் கருதுவது,
இந்தியாவின் GDP இரண்டு சதம் குறையும் என்ற அவரின்
கணிப்பு. அதை அவர் எப்படி என்று விளக்கவில்லை.
எவ்வாறு GDP குறையும் என்று நான் ஆராய்ந்து
கொண்டு இருக்கிறேன். பொருளாதாரத்தில் நல்ல
புலமை உடைய நண்பர்களிடம் இக்கேள்வியைக்
கேட்டுள்ளேன். பதிலுக்கு காத்து இருக்கிறேன்.


கறுப்புப் பணம் என்றால் என்ன என்பது குறித்து
கடந்த வாரமே கட்டுரை எழுதி அது முகநூலில்
வெளியிடப் பட்டும் விட்டது. மீண்டும் மீண்டும்
எத்தனை முறை எழுதுவது? கீரை விற்கும் ஆயாவிடம்
உள்ள ஆயிரம் ரூபாய் கருப்புப்பணமா என்ற கேள்வி
உங்களைத் தவிர இந்தியாவில் வேறு யாருக்கும்
எழ முடியுமா? ஏன் குதர்க்கமும் விதண்டாவாதமும்?

கறுப்புப்பணம் என்பதற்கு முதலாளித்துவம் பல
வரையறைகளை வைத்துள்ளது.
வரி கட்டாத பணம்தான் கறுப்புப்பணம் என்பது
ஒரு வரையறை என்று வைத்துக் கொண்டால்,
இரண்டரை லட்சம் ரூபாய் வரை உள்ள வருமானம்
எப்படி கறுப்புப் பணம் ஆகும்?

முதலாளித்துவப் பொருளாதாரம் குறித்து,
அடிப்படையான பல கேள்விகள் உங்களுக்கு உள்ளன.
எனவே அவற்றுக்கு விடைகாண, அருள் கூர்ந்து
அருகில் உள்ள கல்லூரியின் பொருளாதாரப்
பேராசிரியரை அணுகவும். நான் பொருளாதாரப்
பேராசிரியர் அல்ல.
**
அதே போல, மார்க்சிய பொருளாதாரம் குறித்தும்
மூலதனம் குறித்தும் கம்யூனிஸ்ட் கட்சியில்
வகுப்பு எடுக்கிறார்கள். தோழர் அ  கா ஈஸ்வரன்,
தோழர் தா ஜீவானந்தம் ஆகியோர் வகுப்பு எடுக்கிறார்கள்.
அங்கு சென்று மார்க்சிய பொருளாதாரம் கற்கவும்.
**
நாங்கள் நடத்துவது நியூட்டன் அறிவியல் மன்றமே
தவிர, பொருளாதார மன்றம் அல்ல.
**
உங்களின் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த அளவில்
என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய அளவில் பதில்
சொன்னேன். உங்களின் சந்தேகங்களைத் தீர்த்து
வைக்க இதற்கு மேல் என்னால் முடியாது. எனவே
வீணாக என்னிடம் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
நல்ல பொருளாதார பேராசிரியரை நாடுங்கள், கூடவே
நல்ல மனநல மருத்துவரையும் நாடலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக