வெள்ளி, 15 ஜனவரி, 2016

1973இல் இதுபோல் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய செய்தி
கேள்விப்பட்டு திருச்செந்தூர் சுற்று வட்டாரத்தில்
விசாரித்தேன். அப்போது நான் படித்துக் கொண்டிருந்தேன்.
உடன் பயின்ற நண்பர்கள் மூலம், நேரடியாக அக்காட்சியைப்
பார்த்தவர்களிடம் இருந்து இந்த உண்மையை உறுதி செய்தேன்.
**
1973இல் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப் படவே
இல்லை. அது மட்டுமல்ல. 1973இல் கல்பாக்கம் அணுமின்
நிலையம் தொடங்கப் படவே இல்லை. அது 1983-84இல்தான்
தொடங்கப் பட்டது. இன்னும் சொல்லப் போனால், 1973இல்
தமிழ்நாட்டில் எந்த அணு உலையும் இல்லாத போது,
திமிங்கலங்கள் கரை ஒதுங்கின என்பது குறிப்பிடத் தக்கது.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக