செவ்வாய், 5 ஜனவரி, 2016

கோமாளிகளே உங்கள் பதில் என்ன?
---------------------------------------------------------
ஜட்டி என்ற சொல்லில் ஜ என்பது கிரந்த எழுத்து.
விஷயம் என்ற சொல்லில் ஷ என்பது கிரந்த எழுத்து.
விஷயம் என்பதை விடயம் என்று சொல்லி நம்
கோமாளித்தனத்தை நிரூபிக்கலாம்.
**
ஜட்டி என்பதை எப்படி கிரந்தம் இல்லாமல் எழுதுவது?
சட்டி என்று எழுதினால் பொருள் மாறிவிடும். யட்டி என்று
எழுதினால் பொருள் விளங்காது.
**
எனவே இந்த தற்பவம், தற்சமம் ஆகிய விதிகள் எல்லாம்
இன்று பொருந்தாது. மேற்படி விதிகள் சமஸ்கிருதத்தை
தமிழில் எழுத வழிகாட்டும் விதிகள். ஆங்கிலச் சொற்களைத்
தமிழில் எப்படி எழுதுவது? அதற்குத் தமிழ் இலக்கணத்தில்
விதிகள் இல்லை. 
**
தமிழுக்குப் புது இலக்கணம் சமைக்க வேண்டும் என்று
இதனால்தான் நான் தலைதலையாய் அடித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக