வெள்ளி, 8 ஜனவரி, 2016

இணைய உலகின் கொழுத்த கார்ப்பொரேட் திமிங்கலமான
முகநூல் அதிபர் மார்க் வாட்சப் நிறுவனத்தை
விலைக்கு வாங்கியது ஏன்?
--------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------------
சின்ன மீனைப் பெரிய மீன் விழுங்குவதும், பெரிய மீனைத்
திமிங்கலம் விழுங்குவதும் தண்ணீரில் மட்டும் நடக்கும்
நிகழ்வு அல்ல. இணைய உலகிலும் அதுதான் நடக்கிறது.

கடந்த 2014 பெப்ரவரியில் வாட்சப் (WhatsApp) நிறுவனத்தை
முகநூல் அதிபர் மார்க் விலைக்கு வாங்கி விட்டார்.
 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் 
தோராயமாக 1,18,000 கோடி ரூபாய்) வாட்சப்பை  மார்க் 
விலைக்கு வாங்கி விட்டார்.ஒரு மாதத்தில் 45 கோடிப்பேர் 
வாட்சப்பைப் பயன் படுத்துகின்றனர் என்பதால் மார்க் 
அதை வாங்கிப் போட்டு இருக்கிறார்.

மார்க்கின் இலவசத் திட்டமான Free Basics எவ்வளவு 
கொடிய உள்நோக்கங்களைக் கொண்டது என்று 
உணர வேண்டும்.

மார்க் ஒன்றும் வள்ளலார் அல்ல, வாடிய பயிரைக் 
கண்டபோதெல்லாம் வாடுவதற்கு. இணைய உலகை 
ஏகபோகம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்குடன்தான் 
மார்க் இந்திய ஏழைகளுக்காகக் கண்ணீர் வடிக்கிறார்.
இது முதலைக் கண்ணீரே. விழிப்புடன் இருப்போம்.
----------------------------------------------------------------------------------------------------------  

 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக