புதன், 29 ஏப்ரல், 2015

பெரியாரும் அம்பேத்காரும் இந்த நாட்டின் மகத்தான
சீர்திருத்தவாதிகள். மார்க்சியம் சீர்திருத்தங்களை (REFORMS)
ஒருபோதும் எதிர்த்ததில்லை.பூணூல் ஆதிக்கத்தின் சின்னம்
என்றார் பெரியார். அது தவறு என்று மார்க்சியம் கருதுகிறதா?
இல்லை. ஆனால், இந்திய மார்க்சியர்கள் (CPI, CPM) சாதி
ஆதிக்கத்தை எதிர்ப்பதில் மிகவும் பின்தங்கி நின்றனர்
என்பது கசப்பான வரலாறு.
**
மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக இருந்த
சோம்நாத் சட்டர்ஜி அவர்கள் தம் பேரப்  பிள்ளைகளுக்கு
விழா நடத்திப் பூணூல்  போட்டார். பெரியார் பூணூலை
அறுக்கிறார். சட்டர்ஜி பூணூலை அணிவிக்கிறார்.
இதில் எது சரி?     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக