திங்கள், 13 ஏப்ரல், 2015

சீமான் ஒரு மலையாளியே!
(ஆய்வுக் கட்டுரை)
----------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------
சேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு (Twelfth Night) என்ற 
நாடகத்தில் செபஸ்டியன் என்ற ஒரு பாத்திரம் வரும்.
செபஸ்டியன், வயோலா என்ற இருவரும் இரட்டையர்கள்
என்று சேக்ஸ்பியர் சித்தரித்து இருப்பார். செபஸ்டியன் என்ற 
பெயர் லத்தீன் மொழிப்பெயர் ஆகும். மற்றுமொரு பெயரான 
சைமன் என்பது ஹீப்ரூ மொழிப் பெயர் ஆகும்.

மலையாள கிறிஸ்துவர்களிடம் மிகப் பெருமளவில் 
புழங்கும் பெயர்கள் செபஸ்டியன் மற்றும் சைமன் ஆகும்.
சேஷாத்ரி, தோத்தாத்ரி என்ற பெயர்களைக் கேட்டவுடனே 
பார்ப்பனர்கள் என்று அடையாளம் காண முடிவது போல,
செபஸ்டியன் என்ற பெயரைக் கேட்டவுடன், இது மலையாளக் 
குடும்பப் பெயர் என்று விவரம் அறிந்தவர்களால் எளிதில் 
உணர முடியும்.

நாம் தமிழர் இயக்கத் தலைவர் திரு சீமான் அவர்கள் 
ஒரு மலையாளக் கிறிஸ்துவரே. நாடார் சமூகத்தைச் 
சார்ந்தவர் என்று ஒரு சாதிச் சான்றிதழை அவர் வாங்கி 
வைத்திருக்கக் கூடும். அதை மறுப்பதற்கில்லை.
ஆனால் அவரின் பூர்விகம் தமிழ்நாடு அல்ல; கேரளமே!
அவரின் முன்னோர்கள் மலையாளிகளே! மலையாள 
மண்ணைத் தம் உழைப்பால் வளப்படுத்திய, உழைப்பாளிச் 
சாதியான சாணார் சாதியைச் சேர்ந்த மலையாளிகளே 
சீமானின் முன்னோர்கள்! இது வரலாற்று உண்மை!

இதைப் புரிந்து கொள்ள, பத்தொன்பதாம் நூற்றாண்டுக் 
காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதிக் கொடுமையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்கள் 1956 நவம்பரில்தான் 
உருவானவை. குமரி மாவட்டம் மற்றும் நெல்லை 
மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம் ஆகிய பகுதிகள் 
திருவாங்கூர் சமஸ்தானத்தின் பகுதிகளாக இருந்தன. 
சாதிக் கொடுமை தலை விரித்து ஆடியது.

பனையேறும் தொழில் புரியும் சாணார் சாதிப் பெண்கள் 
மார்பை மூடத் துணி அணிய முடியாத நிலை இருந்தது.
ஆண்களின் மீசைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி 
என்று சாணார், புலையர் சாதியினர் மீது "தலை இறை"
என்ற பெயரில் வரி என்று வரிக்கொடுமை உச்சத்தில் 
இருந்தது. கிறிஸ்துவ மிஷனரிகள் ஒடுக்கப்பட்ட சாதி 
மக்களை கிறிஸ்துவத்தில் ஈர்த்தன. இருப்பினும் சாதிக் 
கொடுமை ஒழியவில்லை.

வரிக்கொடுமையும் சாதிக் கொடுமையும் தாங்க முடியாமல் 
சாணார் சாதியினர் பலர் குடும்பம் குடும்பமாகத் தமிழ்நாட்டுப் 
பகுதிகளுக்கு, இன்றைய தென் மாவட்டங்களுக்கு, வந்தனர். 
அப்படி வந்தவர்களை  CSI நிறுவனத்தின் பாதிரியார்கள்  
ஆதரித்தனர். CSI என்பது CHURCH OF SOUTH INDIA என்று 
பொருள்படும். சாணார் என்பது சாண் நீளம் உள்ள பனை நாரைப் 
பயன்படுத்தி பனைமரம் ஏறும் தொழிலாளர்களைக் குறித்த  
பெயர் ஆகும்.

இவ்வாறு தமிழ்ப் பகுதிகளுக்கு வந்தவர்கள்தான் சீமானின் 
முன்னோர்கள். (தமிழ்ப் பகுதிகள் என்று குறிப்பிடக் காரணம்,
அன்று தமிழ்நாடு என்ற மாநிலம் இல்லை என்பதால்).
மலையாளிகளாக அன்று வந்த சீமானின் முன்னோர்கள் 
இங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த பனைத்தொழில் புரியும் 
தமிழ் நாடார் பெருமக்களுடன்  இரண்டறக் கலந்து, இன்று 
தமிழர்களாகவே அறியப்படுகிறார்கள். 
     
தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவர்களில் மிகுதியும் தென் 
மாவட்டங்களிலேயே செறிந்து இருக்கிறார்கள் என்ற உண்மை 
நாம் மேலே கூறியதற்கு நிரூபணம் ஆகும். அன்றைய,
சாதி எதிர்ப்புப் போராளியான முத்துக்குட்டி எழுதிய 
"அகிலத் திரட்டு"என்ற நூலில் சாணாரின் துயரம் பதிவு 
செய்யப் பட்டு உள்ளது.

ஆக, சீமான் ஒரு மலையாளியே என்று நிரூபித்து உள்ளோம்.
கேரளத் தோழரான அவரை, சேட்டன் என்று அழைத்து 
மரியாதை செய்வோமாக. சேட்டன் சீமான்! அழகான 
அடைமொழி! எந்தா, சேட்டன், இந்தக் கட்டுரையைத் தமிழில்
எழுதி இருக்கிறேன், அதில் வருத்தம் இல்லையே.
ஞான் மலையாளத்திலெ பறயட்டோ!
*************************************************************   
     
                 

7 கருத்துகள்:

  1. ஒரு காலத்தில் யூதர், ஜப்பானியர் அடுத்து அறிவார்ந்த இனம் என தன்னை சொல்லி கொண்டது யாழ்பாணம் ,
    JJJ (Jews, Japanese and Jaffna) என சொல்லி பெருமைபட்டு கொண்டார்கள்
    எல்லாம் 1970 வரைக்குமே, பின் போராட்டம் வன்முறையாக மாறியபின் எல்லாம் மாறிற்று, அதுவும் 1975க்கு பின் நிலமை மகா மோசம்.
    1975க்கு பின் யாழ்பாணத்தில் வன்முறை என்பது புதிதல்ல, ஆல்பர்ட் துரையப்பா எனும் தமிழனை தமிழன் பிரபாகரன் சுட்டுகொன்றதிலிருந்து அது தொடங்கிற்று
    பின் எண்ணற்ற படுகொலைகளை அது கண்டது, உச்சமாக சபாரத்தினத்தோடு சேர்ந்து 900 போராளிகளை புலிகள் அழித்தது உச்சம்
    அதன்பின் மாத்தையா எனும் சக புலியினை சந்தேகத்து பேரில் 600 போராளிகளோடு சுட்டுகொன்றதும் அங்கேதான்
    இன்னும் 1400 இந்திய வீரர்கள் இறந்ததும் அங்கேதான், அதன் பின் புலிகளின் ஏகபோகத்தில் கொல்லப்ட்டவர்கள் ஏராளம்
    கோழிகுஞ்சு களவெடுத்தவனை எல்லாம் புலிகள் சுட்டுகொன்ற வரலாறு உண்டு, கிட்டு கால் போன கோபத்தில் கந்தன் கருணை இல்லத்தில் 70 போராளிகள் கொல்லபட்ட கோரம் உண்டு
    இதனை எல்லாம் கடந்து கருணா பிரிவினை முடக்க நடந்த சண்டையில் 300 கிழக்கு புலிகள் செத்த காவியமும் உண்டு
    ஆக எத்தனை தமிழர்கள் தமிழ்புலிகளால் கொல்லபட்டிருக்கின்றனர் என நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்
    சமீபத்தில் யாழ்பாண மாணவி விந்தியா மிக கொடூரமுறையில் கற்பழித்து கொல்லபட்டார், அதனை செய்தவர்கள் சாட்சாத் தமிழர்கள்
    இதற்கு வை.கோ,சீமான், வேல்முருகன் எல்லாம் ஒரு குரல் கண்டித்து எழுப்பியிருப்பார்கள் ????
    தினமும் அங்கு வாள்வெட்டு , கொலை , கொள்ளை செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன, தமிழ் குழுக்களே குற்றம் சாட்ட படுகின்றன.

    பதிலளிநீக்கு
  2. புலிகளின் தலைவன் பிரபாகரன் கிரித்துல நயவஞ்சகாரர்களின் சுழ்ச்சிக்கு தன்னிச்சையாக இரையானவன்.தமிழ் சைவமக்களை அழிப்பதற்காக .இரோப் கிரித்துவர்களால் பணிக்கப்படடவன்.
    அதை செவ்வனே செய்து முடித்தான்.இப்போது சைவர்கள் ஏண்ணிக்கை சொற்பமே.அவர்களையும் அழிக்கும் முயற்சியில் வண்ணி கிரித்துவும்.மூர் அரபிகளும் கைகோர்த்துள்ளனர். பிரபாகரன் சார் புத்தகம் துக்கினால்தானே. சின்னவயதில்
    கெற்ரப்போல்கொண்டு குருவிசுட்டான். பிறகு குட்டிமணி தங்கத்துரைபோன்றவர்களுக்கு
    எடுபிடியாய்திரிந்தான் அதன்பின்
    எங்கேயோ ஒரு றைபிள் கிடைத்தவுடனை கொஞ்ச அரசியல்வாதிகளையும் நல்ல படித்தவர்களையும் போட்டுத்தள்ளினான் பிறகு இருந்தது எல்லாம் முட்டாள்கள்
    பிரபாகரன்தான் தெய்வம் இவர்தான்எங்கள் தலைவர் என்றார்கள். பிறகென்ன மற்ற இயக்கத்தலைவர்களையும் போராளிகளையும் நாய் சுட்டமாதிரி சுடச்சொல்லி தன்னுடைய கும்பல்களுக்கு ஓடர் போட்டான் அவையும் தலைவர்சொல் தட்டமாட்டார்கள்
    அதேமாதிரி செய்துமுடித்தாங்கள்.
    அடுத்தபத்துவருடத்தில ஏனைய சிறுவர்களை படையில்சேர்த்தான்
    சேர்ந்தவர்களுக்கு பயிற்சியும் கொடுத்து சாப்பாடு இல்லாமல் வந்தவர்களுக்கு வெளிநாட்டுப்பணத்தில் சாப்பாடும்போட்டான். சிறுவர்கள்
    அப்பா அம்மா எல்லாமே இவர்தான் என்று எண்ணி கழமிறங்கி சண்டைபோட்டார்கள்.
    தலைவரைப்பற்றியும் அவர் என்ன
    செய்தார் எத்தினை உயிர்களை காவு கொண்டார் என்று போராளிகளுக்கு தெரியாது.
    பிரபாகரன் புத்தகம்தூக்கினால்தானே அரசியல் போரின் வியூகம் தெரிவதற்கு. முட்டாளாய் இருந்து
    ஈழமக்களையும் முட்டாளாக்கி
    ஈழத்தை குட்டிச்சுவர் ஆக்கினதுதான் மக்கள் கண்ட உண்மை.

    பதிலளிநீக்கு
  3. பிரபாகரன் இப்படிபட்ட பைத்தியக்காரனா?
    .
    .
    .
    பிரபாகரன் எப்படிபட்ட பைத்தியக்காரனாக இருந்தான் என்பதனை சமீபத்தில் இலங்கை பத்திரிகையாளர் எழுதியதில் புரிந்துகொள்ளலாம், அவர் பாலசிங்கத்திற்கு நெருக்கமானவர்
    அதாகபட்டது நார்வே, ஜப்பான் என எல்லா நாடும் பேசிபார்த்துவிட்டு இனி பிரபாகரன் அழிவதை தடுக்க முடியாது, ஆனால் மக்கள் அழிவு அதிகமாக இருக்கும், எதற்கும் ஒருமுறை பேசிபாருங்கள் என பாலசிங்கத்த்தை அனுப்பி இருந்தார்கள்
    இனி யுத்தம் வந்தால் உலக நாடுகள் புலிகளை அழித்துவிடும் தம்பி, கொஞ்சம் யோசனை செய் என்றார் பாலசிங்கம்
    “அதை விடுங்கோ, சேரனின் ஆட்டோகிராப் பாருங்கோ..” என படத்தை ஓட விட்டார் பிரபாகரன்
    படம் முடிந்தது, பேச்சை தொடக்கினார் பாலசிங்கம்
    “இன்னொருமுறை பாப்போம்..” என படத்தினை ஓடவிட்டார் பிரபாகரன்
    மறுபடியும் படம் முடிந்தது, இனி பேசலாமா என்றார் பாலசிங்கம்
    “இன்னொருக்கா பாப்போம்..” என படத்தை தொடங்கினார் பிரபாகரன்
    இதற்கு மேலும் பாலசிங்கத்தை அவமானபடுத்த முடியாது, நாசமாய் போ என மனதிற்குள் சபித்தபடி கிளம்பிய பாலசிங்கம் அதன் பின் பிரபாகரனை சந்திக்கவில்லை
    இதனைத்தான் பிரபாகரன் எதனையுமே சிந்திக்கும் மனநிலையில் இல்லை என பகிரங்கமாக சொன்னார் நார்வே தூதர்
    இனி சனம் சாகுறத யாரும் தடுக்க முடியாது, தம்பிக்கு ஒரு இழவும் புரியாது என சொல்லிவிட்டு கைகழுவினார் பாலசிங்கம்
    ஆக முடிவினை யார் தேடிகொண்டார்கள் என்பது பாலசிங்கத்திற்கு நெருங்கிய பத்திரிகையாளன் மூலம் தெரிகின்றது
    அதாவது மக்கள் லட்சகணக்கில் சவார்கள் என பால்சிங்கம் கொடுத்த எச்சரிக்கையினை கொஞ்சமும் சட்டை செய்யாமல் ஆட்டோகிராப் படம் பார்த்தவன் மக்கள் தலைவனாம்
    கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சி என்பவது அவனுக்கு இருந்திருக்கின்றதா? இருந்தால் இப்படி செய்வானா?

    பதிலளிநீக்கு
  4. போடா அரை குறை பயலே... உனக்கு சீமானை வசைபாடணும் அவ்வளவே...

    பதிலளிநீக்கு