சனி, 19 டிசம்பர், 2015

இளைய தலைமுறை நண்பர்களுக்கு,
நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பு, துக்ளக் ஆசிரியர்
சோ ராமசாமி அவர்கள் கலைஞரைப் பேட்டி கண்டார்.
**
பேட்டியின்போது, "அன்பழகன் ஒரு துணைப்
பேராசிரியர்தானே, அவரை எப்படி நீங்கள் பேராசிரியர்
என்று அழைக்கலாம்?" என்று ஒரு கேள்வியைக்
கேட்டார். அதற்கு கலைஞர், "மக்கள் மன்றத்தில்
அவர் பேராசிரியர் ஆகி விட்டார்" என்று தமக்கே உரிய,
வேறு எவருக்கும் கைவராத சாதுரியத்துடன்
பதிலளித்தார்.
**
இது குறித்து அலுவலகத்திலும்
பொது இடங்களிலும் விவாதித்த "மேன்மக்கள்"
"அது எப்படி அவர் பேராசிரியர் ஆக முடியும்?"
என்று குதித்தார்கள். அப்போது நான் அளித்த விளக்கம்தான்
இது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் அளித்த
விளக்கம் இது. அப்போது எங்கள் துறையில்
Junior Engineer, Asst Engineer என்ற பதவிகள் உண்டு.
எனவே அவற்றைச் சுட்டிக் காட்டி, நான் விளக்கியபோது,
"மேன்மக்கள்" வாயை மூடிக் கொண்டனர்.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக