வியாழன், 17 டிசம்பர், 2015

பாலியல் ஒழுக்கக்  கேட்டிற்குப் பேர்போன சினிமாத்
துறையில், பாலியல் ஒழுக்கத்துடன் ஒரு துறவியைப்
போல வாழ்ந்து வருபவர் இளையராஜா.  அவரிடம்
போய், ஆபாச வார்த்தைப் பாடலைப் பற்றிக் கருத்துக்
கேட்கும்போது, அவர் ஆத்திரம் அடைவது இயற்கை.
**
ஒழுங்காகக் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கும்
ஒரு பெண்ணிடம் சென்று, ஒரு விபச்சாரியைப்
பற்றிக் கருத்துக் கேட்டால், நிச்சயமாக அந்தப் பெண்
கொதித்து எழுவது இயற்கை.
**
இது போல்தான், இளையராஜா நடந்து கொண்டுள்ளார்.
எனவே இளையராஜா மீது தவறில்லை.
**
இளம் ஊடகவியலாளர்கள் உளவியலையும் கற்க வேண்டும்.
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். (குறள்)      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக